செய்திகள் :

பிப். 7-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

post image

சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப். 7 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 07.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தவெக மாறும்: விஜய்

வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி 25-வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது.

எனவே அனைத்து மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 ராம்சார் பகுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

உலக ஈரநிலங்கள் நாளை முன்னிட்டு, மேலும் 2 ராம்சார் பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்இது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:”உலக ஈரநிலங்கள் நாளான இன்... மேலும் பார்க்க

கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!

குறிப்பிட்ட சில அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலட... மேலும் பார்க்க

தவெக ஆண்டு விழா: கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்த விஜய்!

தமிழக வெற்றிக்கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கொள்கைத் தலைவர்களின் சிலைகளை விஜய் திறந்து வைத்தார். மேலும் பார்க்க

திமுகவை எதிர்க்கும் துணிவின்றி மறைமுக யுத்தம்: முதல்வர்

திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு ... மேலும் பார்க்க

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மண்ணச்சநல்லூர்: பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூச பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!

மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு வீடு திரும்பியபோது நடந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பி... மேலும் பார்க்க