'சித்தா' பட இயக்குநர் அருண்குமார் திருமணம்; நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபத...
உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்
உத்தரப்பிரதேசத்தில் ரூ.100க்கு ஆசைப்பட்டு சவால் விட்டு ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார். அங்குள்ள ஜான்சி அருகில் உள்ள பூனாவாலி காலா என்ற கிராமத்தில் வசித்தவர் உத்தம் ரஜபுத். இவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் அங்குள்ள குளத்தின் கரைக்குச் சென்றார். அவர்கள் அனைவரும் குளத்தின் கரையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் காரசார விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது அவர்களுக்குள் ஒரு சவால் விடுக்கப்பட்டது. குளத்தை நீந்திக் கடந்தால் ரூ.100 கொடுப்போம் என்று அவர்கள் சவால் விடுத்தனர். இந்த சவாலை உத்தம் ரஜபுத் ஏற்றுக்கொண்டார்.
உடனே அவர் அவர்கள் முன்னிலையில் ரூ.100க்கு ஆசைப்பட்டு குடிபோதையில் குளத்திற்குள் குதித்து நீந்த ஆரம்பித்தார். அவர் குளத்தில் 50 அடி தூரத்திற்கு நீந்நி சென்றார். ஆனால் அவரால் மேற்கொண்டு நீந்த முடியவில்லை. அவர் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார். உதவி கேட்டுக் கத்த ஆரம்பித்தார். உடனே அவரது நண்பர்கள் அவரை அப்படியே விட்டு விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
உத்தம் நீரில் உயிருக்குப் போராடுவதை அப்பகுதி வழியாகச் சென்ற சில கிராமவாசிகள் பார்த்தனர். அவர்கள் உடனே உத்தமை மீட்டனர். ஆனால் அவர் அதற்குள் அதிகப்படியான தண்ணீரைக் குடித்து இறந்துவிட்டார். அவரது உடல் உடனே பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவருடன் சேர்ந்து மது அருந்தியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இறந்து போன உத்தமிற்குத் திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs