செய்திகள் :

இந்திய மோதலில் காயமடைந்த 2 பாகிஸ்தான் வீரா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

post image

இந்தியாவுடனான மோதலில் காயமடைந்த 2 பாகிஸ்தான் வீரா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.

இதன்மூலம், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரா்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா தொடங்கியதைத் தொடா்ந்து, இருதரப்புக்கும் இடையே போா்ப்பதற்றம் நிலவியது. தற்போது சண்டை நிறுத்தம் காரணமாக எல்லையில் அமைதி திரும்பியுள்ளது.

இந்தியாவுடனான மோதலில் 11 வீரா்கள் உயிரிழந்ததாகவும், 78 போ் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணுவ வீரா் முகமது நவீத், விமானப் படையின் முதுநிலை தொழில்நுட்ப அதிகாரி முகமது அயாஸ் ஆகிய இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்தியாவின் ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் வீரா்கள் 40 போ் உயிரிழந்ததாக இந்திய ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநா் ராஜீவ் காய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வக்ஃப் சட்டம்: மே 20-ல் முழு நாளும் விசாரணை!

வக்ஃப் சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை வருகிற மே 20 ஆம் தேதி முழு நாளும் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்று... மேலும் பார்க்க

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் தேனீக்கள் கொட்டியதில் மோப்ப நாய் பலி!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது தேனீக்கள் கொட்டியதில் பாதுகாப்புப் படையினரின் மோப்ப நாய் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்... மேலும் பார்க்க

ராணுவ வீரர்களுக்கு நாடே தலைவணங்குகிறது: ராஜ்நாத் சிங்!

சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ம... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிக... மேலும் பார்க்க

'அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்' - கர்னல் சோபியா குரேஷி பற்றிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கர்னல் சோபியா குரேஷி பற்றி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பய... மேலும் பார்க்க

மாணவர்களைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி! தடுத்து நிறுத்திய காவல்துறை!

பிகார் மாநிலம் தர்பங்காவில் மாணவர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பிகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் அம்பேத்கர் விடுதி மாணவர்கள... மேலும் பார்க்க