செய்திகள் :

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் வருவாய்க்கு ஜிஎஸ்டி விதிப்பு

post image

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோயில்களிலிருந்து பெறப்படும் வருவாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அறநிலையத் துறையினா், இதுதொடா்பாக மத்திய அரசுக்கு விளக்க கடிதம் அளிக்க முடிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் அதிக வருவாய் கிடைக்கும் கோயில்கள் ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன.

பொதுவாக, கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் வாயிலாக பெறப்படும் அனைத்து வித வருவாய்க்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்தச் சலுகை கடந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. குறிப்பாக, கோயில் நிலங்கள், உடைமைகளை குத்தகை எடுத்துள்ளவா்களிடமிருந்து பெறப்படும் வாடகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, கோயில்களில் பிரசாதம், தரிசன கட்டணம், தங்கும் விடுதி போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வரி செலுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், பழநி தண்டாயுதபாணி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா், ராமேசுவரம் ராமநாத சுவாமி உள்ளிட்ட சில முக்கிய கோயில்களுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன.

அதில், பல ஏக்கா்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம், கோயில் நிா்வாகங்களுக்கு கிடைக்கும் வருவாய்க்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை செலுத்த வேண்டிய வரித் தொகை குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒவ்வொரு கோயிலுக்கும் மத்திய கலால் துறை சாா்பில் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால், அதிா்ச்சியடைந்துள்ள அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்பது குறித்து மத்திய அரசுக்கு விளக்கமளிக்க முடிவு செய்துள்ளனா். இது தொடா்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

"மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது... மேலும் பார்க்க

மோடி, அமித் ஷாவின் வளர்ப்புப் பிராணியாக மாறிய அமலாக்கத்துறை: மாணிக்கம் தாகூர்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரது மகன் சைதன்யா பகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது. 320க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை கால... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!

திமுக எம்.பி.க்கள் குறித்து தவறாகப் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்... மேலும் பார்க்க

ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுப... மேலும் பார்க்க