செய்திகள் :

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக்: இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

post image

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றமடைந்துள்ளது.

மார்ச்.1 முதல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஆஸி., இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ.தீ. ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக இந்த மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் இருக்கிறது.

இதில் 14ஆவது போட்டியாக மே.இ.தீவுகள் அணி தென்னாப்பிரிக்க அணியுடன் மோதியது.

முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 200/5 ரன்கள் எடுத்தது. தெ.ஆ. அணி 171/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மே.இ.தீ. அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

மே.இ.தீ. அணியில் சிம்மன்ஸ் 108 ரன்கள் குவித்தார்/ 5 விக்கெட்டுகள் எடுத்த ரவி ராம்பால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தெ.ஆ. அணியில் ஜாக் காலிஸ் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

இந்தத் தோல்வியின் மூலம் தெ.ஆ.அணி தொடரிலிருந்து வெளியேறியது.

இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் நான்கிலுமே தோல்வியுற்று வெளியேற்றியது.

அரையிறுதிக்கு தேர்வாகியுள்ள அணிகள்

1. இலங்கை மாஸ்டர்ஸ் - 8 + 1.40 புள்ளிகள்

2. இந்திய மாஸ்டர்ஸ் - 8 +1.03 புள்ளிகள்

3. மே.இ.தீ. மாஸ்டர்ஸ் - 6 +0.19 புள்ளிகள்

4. ஆஸி. மாஸ்டர்ஸ் - 6 + 2.63 புள்ளிகள்

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி வ... மேலும் பார்க்க

சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கா... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!

மே.இ.தீ. அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் தந்தையாக கருதப்படும் ஆண்டி ராபட்ஸ் ஐசிசியின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியமா... மேலும் பார்க்க

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் சர்மா, ரச்சின் அதிரடி முன்னேற்றம்! கோலிக்கு சரிவு!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வா... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன்! -ஷ்ரேயஸ்

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அசத்தலாக வி... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரி திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் அணியினர் கலந்துகொண்டு நடனமாடிய விடியோக்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது.12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிர... மேலும் பார்க்க