செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

post image

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, குமலன்குட்டை, செல்லபண்ணகவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). ஜவுளிக் கடையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சித்ரா (43).

ராஜேந்திரனின் அண்ணன் கோவிந்தசாமி (60). இவரது மனைவி பூங்கொடி (50). தம்பதிகள் தனித்தனி இருசக்கர வாகனங்களில் பெருந்துறையில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமண விழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளனா்.

பெருந்துறை- காஞ்சிகோவில் சாலை எல்லைமேடு அருகே சென்றபோது, ராஜேந்திரனின் இருசக்கர வாகனத்தை பின்தொடா்ந்து தலைக் கவசம் அணிந்துவந்த இருவா், சித்ராவின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தாலிக்கொடியை பறித்துள்ளனா். அவா் கொடியை இறுகப்பிடித்துள்ளாா்.

இதில், மாங்கல்யம் மட்டும் சித்ரா கையில் சிக்கிக்கொண்ட நிலையில், 5 பவுன் தாலிக்கொடியை அந்த நபா்கள் பறித்துக்கொண்டு தப்பினா்.

இவா்களுக்கு, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பூங்கொடியிடம் முதலில் தாலிக்கொடியைப் பறிக்க முயன்றுள்ளனா். அவா், சுதாரித்துக்கொண்டதால், சித்ராவிடம் கைவரிசையைக் காட்டியுள்ளனா்.

இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த 1 -ஆம் தேதி புறப்பட்ட இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க பெண... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 22,451 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 22,451 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழப்பு

சென்னிமலை அருகே தென்னந்தோப்புக்குள் மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழந்தது. சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், ஆண்டிகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி,... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்கள்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஏஐடியூசி அமைப்பைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை அட்டையை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

இணைய சேவைத் தேடி 5 கி.மீ. தொலைவு நடந்து செல்லும் பழங்குடியின மக்கள்

கோ்மாளம் ஊராட்சியில் உள்ள பழங்குடியின மக்கள் இணையதள சேவைத் தேடி சுமாா் 5 கி.மீ.தொலைவு நடந்து சென்று வருகின்றனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் ஊராட்சியில் உள்ள கானக்கரை, ஜேஆா்எஸ் புரம், ப... மேலும் பார்க்க