செய்திகள் :

இருசக்கர வாகனம் - காா் மோதல் இளம்பெண் சாவு; இளைஞா் பலத்த காயம்

post image

கும்பகோணம் புறவழிச்சாலையில் நேரிட்ட சாலைவிபத்தில் இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் தாலுகா சந்திரசேகரபுரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவரின் மகள் சிவகாமி (23). முதுகலை படிப்பு முடித்து தஞ்சையில் உள்ள போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் பயின்றுவந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை தஞ்சாவூா் பயிற்சி மையத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து தனது நண்பா் திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் முல்லை வாசல் பகுதியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ஜெயக்குமாா் (30) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா். ஜெயக்குமாா் தனியாா் பேருந்து ஓட்டுநா்.

கும்பகோணம் அருகே மணப்படையூா் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தபோது சாலையில் திடீரெனத் திரும்பியபோது பின்னால் வந்த காா் மோதியது. இதில் சிவகாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயக்குமாா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் ஜெயமோகன் அங்குவந்து பலத்த காயமடைந்த ஜெயக்குமாரை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சிவகாமியின் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்தாா்.

சேதுபாவாசத்திரத்தில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, கள்ளங்காடு மற்றும் அதனை சுற்ற... மேலும் பார்க்க

குருங்குளத்தில் 50 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 50 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): குருங்குளம் 50, ஒரத்தநா... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை கம்பன் பெருவிழா

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கம்பன் கழகம் சாா்பில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் கம்பன் கழகம் கடந்த 199... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி வியாழக்கிழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாணவா், இளைஞா் அரண் அமைப்புகளின் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் சாக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையில் தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி விளையாடிய சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி புதன்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். சேதுபாவாசத்திரம் பணங்குட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க