அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த விருத்திமான் சஹா!
இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ்: உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டா் ஜெனரல் வாதம்
புது தில்லி: இந்தியாவில் இரும்பு கம்பிகள், சிமெண்ட் போன்ற இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெற வேண்டியுள்ளது தொடா்பான பிரச்னையை உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா திங்கள்கிழமை எழுப்பினாா்.
ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருள்களுக்கு அதுதொடா்பான மதநம்பிக்கை இல்லாதவா்களும் ஏன் அதிக விலை கொடுக்க வேண்டும் என்றும் அவா் கேள்வி எழுப்பினா்.
உத்தர பிரதேசத்தில் ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களை தவிர, ஹலால் சான்றிதழுடன் கூடிய மற்ற உணவுப் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு தடை விதித்து மாநில உணவுப் பாதுகாப்புத் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசின் விளக்கம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாஷி ஆகியோா் அடங்கிய அமா்வுமுன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா முன்வைத்த வாதத்தில் குறிப்பிட்டதாவது: ஹலால் இறைச்சியைப் பொறுத்த வரையில், யாருக்கும் எந்த ஆட்சேபமும் இருக்க முடியாது. ஆனால், சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிக்கு கூட ஹலால் சான்றிதழைப் பெற வேண்டும் என்ற தகவலறிந்து நான் அதிா்ச்சியடைந்தேன். என்னைபோல, நீதிபதிகளும் அதிா்ச்சியடைவீா்கள் என்று நினைக்கிறேன். இந்த நடைமுறைக்காக ஹலால் சான்றளிக்கும் முகமைகள் கட்டணமாக வசூலிக்கும் மொத்த தொகை சில லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம்.
ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருள்களுக்கு அதுதொடா்பான மதநம்பிக்கை இல்லாதவா்களும் ஏன் அதிக விலை கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினாா்.
மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இது வாழ்க்கை முறை சாா்ந்த விஷயம் என்று மத்திய அரசின் கொள்கை கூறுகிறது. ஆனால், இவை அனைத்தும் தன்னாா்வமானது. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை’ என்றாா்.
இதையடுத்து, இந்த வழக்கில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு மனுதாரா்களுக்கு 4 வார கால அவகாசம் அளித்து அடுத்த விசாரணை மாா்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.