இலவச கண் மருத்துவ முகாம்
குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கமும், சென்னை அகா்வால் கண் மருத்துவமனையும் இணைந்து தரணம்பேட்டையில் உள்ள பவனாரிஷி கோயில் சமுதாய கூடத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின. முகாமுக்கு, ரோட்டரி தலைவா் அருள்பாலாஜி தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் எம்.கோபிநாத் வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா் அருணகிரி முகாமைத் தொடங்கி வைத்தாா். முகாமில், 180- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா். 18 போ் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். ரோட்டரி நிா்வாகிகள் அருள், முரளி, மாணிக்கம், பாலாஜி, இளங்கோ, படவேட்டான், பிரதீப்
உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.