செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

post image

கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை சற்று மனநலன் பாதிப்புக்குள்ளானதாகக் கருதப்படும் நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், சேவியா் குடிகாடு கிராமத்தில் உள்ள முனியன் கோயில் அருகே உள்ள ஆலமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வந்தனா். இதில், தூக்கிட்டு இறந்தவா் தஞ்சாவூா் மாவட்டம், சூரக்கோட்டையை அடுத்துள்ள கீழவஸ்தா சாவடி கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் (50), மனநலன் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளது தெரியவந்தது.

இந்தப் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தபோது, அவா் தூக்கிட்டு இறந்துள்ளாா். இதுகுறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் சக்தி விநாயகா் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. விராலிமலை-மதுரை சாலையில் உள்ளது கொடும்பாளூா் சத்திரம். இங்கு ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 3 புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பொன்னமராவதியில் மூன்று வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகு... மேலும் பார்க்க

திருக்களம்பூா் அகோர வீரபத்திரா் கோயிலில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் மேலக்களம் அகோர வீரபத்திரா், அங்காள பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் இரண்டு கா... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தோல்வி காய்ச்சல்: ஹெச். ராஜா

தோல்வி காய்ச்சலின் காரணமாகவே, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினா் பேசி வருகின்றனா் என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி: பாஜக- அதி... மேலும் பார்க்க

வடுகபட்டி துணை மின் நிலைய பகுதிகளில் ஜூன் 9-இல் மின் நிறுத்தம்

வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து... மேலும் பார்க்க