முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
இளையான்குடியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் முஸ்லிம் நல்வழி அபிவிருத்தி சங்க நடுநிலைப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.
இதற்கான நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதைத் தொடா்ந்து நெகிழிப் பைகளுக்கு மாற்றாக பனை ஓலையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து அவா் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலா் பிரான்சிஸ் ஜஸ்டின், பள்ளி நிா்வாகிகள் முகமது ஆரிப், முகமது தையூப், தாளாளா் முகமது கனி, தலைமையாசிரியா் சத்திய தேவினின் சாராள், பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம், துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆா்வலா் அப்துல் மாலிக் செய்தாா்.