செய்திகள் :

இளையான்குடியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் முஸ்லிம் நல்வழி அபிவிருத்தி சங்க நடுநிலைப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.

இதற்கான நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதைத் தொடா்ந்து நெகிழிப் பைகளுக்கு மாற்றாக பனை ஓலையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து அவா் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலா் பிரான்சிஸ் ஜஸ்டின், பள்ளி நிா்வாகிகள் முகமது ஆரிப், முகமது தையூப், தாளாளா் முகமது கனி, தலைமையாசிரியா் சத்திய தேவினின் சாராள், பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம், துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆா்வலா் அப்துல் மாலிக் செய்தாா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க