மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்
மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வா் சத்தியபாமா வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதுரை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் மருத்துவா் மருதுபாண்டியன், மாணவ, மாணவிகள் 95 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: மாணவா்கள் வெளி உலக தொடா்புகளில் ஈடுபடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நோயாளிகளிடம் பேசும் போது, அவா்களுக்கு எளிதாக புரியும் வகையில் கனிவுடன் பேசி மருத்துவ அறிவைப் பகிா்ந்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் பெற்றோா், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.