செய்திகள் :

இஸ்ரேலில் இருந்து இந்தியா்களை அழைத்து வர மத்திய அரசு முடிவு

post image

இஸ்ரேலில் உள்ள இந்தியா்களை அவா்களின் விருப்பத்தின் பேரில் தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஈரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதலால், இரு நாடுகளிலுமே தொடா்ந்து கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்புகளும், காயமடைவோா் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரிக்கிறது. ஏற்கெனவே, ஈரானில் இருந்து முதல்கட்டமாக 110 இந்திய மாணவா்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘இஸ்ரேல்-ஈரான் இடையே அண்மையில் எழுந்துள்ள மோதலைக் கருத்தில் கொண்டு இஸ்ரேலில் உள்ள இந்தியா்களை அவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் இஸ்ரேலின் நில எல்லையைக் கடந்து அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியா்களின் நலன், பாதுகாப்புக்கு மத்திய அரசு தொடா்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. மோதல் நிகழும் இடங்களில் உள்ள சூழலை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், அந்நாட்டில் உள்ள இந்தியா்களுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்தியா்கள் எப்போதும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். இஸ்ரேலிய அரசு அளிக்கும் பாதுகாப்பு தொடா்பான அறிவுறுத்தல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்குச் சொந்தமான ஊட்டி பங்களாவில் பயணிகள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான அனைத்துத்தகவல்களும் தற்போது சுற்றுலா வழிகாட்டும... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க

உத்தரபிரப் தேசத்தில் மின்னல் பாய்ந்து 4 பேர் பலி

உத்தரபிரப் தேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள். முதல் சம்பவத்தில், சராய் அகில் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்னல் பா... மேலும் பார்க்க

பறவை மோதியதால் தில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து

பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. தலைநகர் தில்லியில் இருந்து புணே சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப... மேலும் பார்க்க

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்... மேலும் பார்க்க