செய்திகள் :

இஸ்ரேலில் இருந்து கிரெட்டா தன்பர்க் வெளியேற்றம்

post image

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாவது:

இஸ்ரேலில் இருந்து விமானம் மூலம் கிரெட்டா தன்பர்க் பிரான்ஸூக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் தனது சொந்த நாடான ஸ்வீடனை நோக்கிச் சென்றார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அங்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்தும், ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு நிவாரணக் கப்பலொன்றை காஸாவை நோக்கி கடந்த வாரம் அனுப்பியது.

இந்தக் கப்பலில், கிரெட்டா தன்பர்க் உள்பட 12 தன்னார்வலர்கள் பயணித்தனர்.

இருந்தாலும், காஸாவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் அந்தக் கப்பலை இஸ்ரேல் படையினர் சிறை பிடித்தனர். மேலும், அதில் இருந்த தன்னார்வலர்களையும் அவர்கள் கைது செய்தனர்.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி கொலை!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங... மேலும் பார்க்க

ஈரான் பதற்றம்: இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!

ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்த... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே விருப்பம்: முகமது யூனுஸ்

‘இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே வங்கதேசம் விரும்புகிறது; ஆனால், அதில் எப்போதும் சில பிரச்னைகள் நிலவி வருகின்றன’ என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். பிரிட்டனுக்கு 4 நாள் சுற... மேலும் பார்க்க

அணுசக்தி வாக்குறுதிகளை ஈரான் நிறைவேற்றவில்லை

ஈரான் தனது அணுசக்தி வாக்குறுதிகளை பின்பற்றவில்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ 20 ஆண்டுகளில் முதல்முறையாக குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஐ.நா.வில் அந்த அமைப்பு நிறைவேற்றியுள்ள... மேலும் பார்க்க

டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிா்ப்பு: அமெரிக்கா முழுவதும் பரவும் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து அசோசியேட்டட்... மேலும் பார்க்க