செய்திகள் :

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?

post image

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்காக 20 பரிந்துரைகளைப் பரிந்துரைத்திருந்தார்.

ஹமாஸின் ஒப்புதல்

ஐ.நா பொதுசபைக்காக, அப்போது அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அந்தப் பரிந்துரைகளை திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார்.

ஆனால், இதுவரை இந்தப் பரிந்துரைகளை ஹமாஸ் ஒப்புகொள்ளாமல் இருந்தது. இதனால், இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலையும் தொடர்ந்து வந்தது.

ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

இன்னொரு பக்கம், இதை ஒப்புகொள்ள ஹமாஸிற்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க நேரப்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, கால அவகாசம் தந்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஹமாஸ், ட்ரம்ப் பரிந்துரைகளை ஒப்புகொண்டுள்ளது.

பணயக் கைதிகளை விடுவித்தல், காசா தற்காலிகமாக பாலஸ்தீனிய தொழில்நுட்பக் குழுவால் (அரசியல் சாராத நிபுணர்கள்) நடத்தப்படும்... போன்ற ட்ரம்ப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளது. ஹமாஸ் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் அறிவித்துள்ளது.

இதையடுத்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில்...

"ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அவர்கள் அமைதிக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை நம்புகிறேன். காசா மீது குண்டு வீசுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போது தான், அவர்கள் தங்களது பணயக் கைதிகளைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் பெற முடியும். இப்போது குண்டு வீச்சை தொடர்வது மிகவும் ஆபத்தானது.

தீர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஏற்கெனவே ஆலோசனையில் இருக்கிறோம். இது காசாவைப் பொறுத்தது மட்டுமல்ல... நீண்ட காலமாக மத்திய கிழக்கில் எதிர்பார்க்கப்படுகிற அமைதியைக் குறித்தது" என்று பதிவிட்டுள்ளார்.

TVK : விஜய்யை வளைக்கப் பார்க்கிறதா பா.ஜ.க... டெல்லி பல்ஸ் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் விஜய் செல்லப் போகிறார்... அவரை கையில் எடுத்துவிட்டது பா.ஜ... மேலும் பார்க்க

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.ஜப்பான் சர்வதேச அளவில் பாலின ... மேலும் பார்க்க

கரந்தை: `நாங்களும் கொடுக்காத மனு இல்ல பாக்காத ஆள் இல்ல' சிதைந்த படித்துறையை சீரமைக்க கோரும் மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் உள்ள வடவாறு படித்துறை கடந்த எட்டு வருடமாக சிதைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்... மேலும் பார்க்க

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? - ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது... மேலும் பார்க்க

உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தான் ஃபாஸ்ட் டேக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பய... மேலும் பார்க்க