செய்திகள் :

ஈரான் பதற்றம்: இந்தியாவில் விமான சேவை பாதிப்பு!

post image

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், இந்தியாவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது.

இந்த நிலையில், ஈரான், இஸ்ரேல் வழியாக இந்தியாவுக்கு வரும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் திரும்பி வருவதாகவும், லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தில்லி நோக்கி வரும் விமானங்கள், ஈரான் வான்வெளியை தவிர்த்து மும்பைக்கு மாற்றி அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து ஈரான் வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க : ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

குஜராத் விமான விபத்து! கூடுதலாக ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோருக்கு இடைக்கால நிவாரணமாக ஏர் இந்தியா கூடுதலாக ரூ. 25 லட்சம் அறிவித்துள்ளது.ஜூன் 12ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான ந... மேலும் பார்க்க

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க இன்றே கடைசி நாள்!

ஆதார் விவரங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன்(ஜூன் 14) நிறைவடைகிறது.ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தவர்கள் உடனடியாக புதுப்பிக்க ஆதார் ஆணையம் அற... மேலும் பார்க்க

கோயில் மீது மாட்டிறைச்சி சம்பவம்- அசாமில் 38 பேர் கைது

துப்ரி மாட்டிறைச்சி சம்பவத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அசாமின் துப்ரி பகுதியில் உள்ள அனுமன் கோயிலின் மீது கடந்த 7ஆம் தேதி மர்ம நபர்கள் பசு மாட்... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின்போது, விடுதி அருகே இருந்த ஒரு கடையில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது மேலும் கவலையளித்துள்ளது.ஆகாஷ் பாத்னி என்ற சிறுவன், பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி அருகே டீக்கடையி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இ... மேலும் பார்க்க