செய்திகள் :

ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு!

post image

பவானி: சித்தோடு அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த கோணவாய்க்கால், ராமன் பாலக்காட்டைைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் யுவானந்த வேல்(45). இவருக்கு சொந்தமான சர்வீஸ் ஸ்டேஷனில் சாயக்கழிவு நீரை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணி இன்று(மார்ச் 30) நடைபெற்றது.

சித்தோட்டை அடுத்த பெருமாள் மலை, ஆர் என். புதூரைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்லப்பன் (52) என்பவர் லாரி டேங்கருக்குள் முகத்தில் துணி கட்டிக்கொண்டு இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ஆசிட் வீரியம் தாங்காமல் கண் எரிச்சல் ஏற்பட்டதோடு, மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைக் கண்ட யுவானந்த வேல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்திரன் (54) டேங்கருக்குள் இறங்கி செல்லப்பனை மீட்டு வெளியே அனுப்பினர்.

இதனிடையே, எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், டேங்கருக்குள் இறங்கிய மேற்கண்ட இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு டேங்கருக்குள் மயங்கி விழுந்தனர். இதைக்கண்ட அப்பகுதியினர் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் விரைந்த தீயணைப்பு படையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் டேங்கருக்குள் இறங்கி அங்கே மயங்கிக் கிடந்த இருவரையும் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு தொழிலாளி செல்லப்பன், பவானி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க

பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ... மேலும் பார்க்க