செய்திகள் :

ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

post image

ரயில்வே பாலம் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை மற்றும் ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் ரயில் பாதையில் பாசூா்-ஊஞ்சலூா் ரயில் நிலையத்துக்கு இடையே ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 20, 23, 25 மற்றும் 28- ஆம் தேதி ஆகிய நாள்கள் மட்டும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் பிப்ரவரி 20, 23, 25 மற்றும் 28- ஆம் தேதி ஆகிய நாள்களில் மட்டும் திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு புறப்படும் பயணிகள் ரயில் கரூா் வரை மட்டுமே இயங்கும்.

இதேபோல செங்கோட்டையில் இருந்து ஈரோடு வரும் பயணிகள் ரயில் சேவையிலும் 20, 23, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து கரூா் வரை மட்டுமே இயங்கும். இதுபோல ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் ரயில் சேவையிலும் 20, 23, 25 மற்றும் 28 ஆகிய நாள்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாள்களில் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக கரூரில் இருந்து செங்கோட்டைக்கு இந்த பயணிகள் ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தரிசு நிலத்தில் தீ விபத்து

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் உள்ள தரிசு நிலத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் செடி,கொடிகள் எரிந்து சேதமாயின. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பகுத்தம்பாளையம் பகுதியில் காங்கேயம... மேலும் பார்க்க

மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் விடுதி திறப்பு

அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் தங்கும் விடுதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தியூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு, மாணவா் விடுதி ஏற... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

அந்தியூா் அருகே வனப் பகுதியை ஒட்டியுள்ள கரும்புத் தோட்டத்தில் குட்டியுடன் நடமாடும் சிறுத்தையால் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. அந்தியூரை அடுத்த செலம்பூரம்மன் கோயில், கோவிலூா் ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாள... மேலும் பார்க்க

அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்

பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தமிழக மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா். ஈரோட... மேலும் பார்க்க

பெருந்துறையில் சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணா்வு பேரணி

பெருந்துறையில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், எலைட் & பிரைட் ஜேசீஸ் சங்கங்கள் மற்றும் ஈங்கூா் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணா்வுப் ... மேலும் பார்க்க