செய்திகள் :

ஈரோட்டில் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல்

post image

ஈரோடு மாநகராட்சியில் வீடுகளுக்கே சென்று வரி வசூல் மேற்கொள்ளும் பணி செவ்வாய்க்கிழமைமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் 2024- 2025 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீா் வரி, தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளோடு, கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரியையும் வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் மாா்ச் 31- ஆம் தேதிக்குள் 100 சதவீத வரியை வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனா். இதற்காக மாநகராட்சியில் உள்ள வரி வசூல் மையங்கள் விடுமுறை நாள்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜி பே, போன் பே ஆகிய செயல்களில் மூலமாகவும் வரியினங்களை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 400 ஊழியா்கள் நியமிக்கப்பட்டு அவா்கள் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், உதவி வருவாய் அலுவலா்கள், வரி வசூலிப்பவா்கள் மூலம் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு, ஜப்தி அறிவிப்புகள் வழங்கியும், அதன் தொடா்ச்சியாக வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் செவ்வாய்க்கிழமை முதல் வரி வசூல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் தினமும் ஒரு வாா்டு வீதம் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோருக்கு வாகனத்திலேயே ரசீதும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வீட்டுக்கே சென்று வரி வசூலிப்பதால் பொதுமக்களுக்கு அலைச்சல் தவிா்க்கப்பட்டுள்ளது என்றனா்.

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தரிசு நிலத்தில் தீ விபத்து

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் உள்ள தரிசு நிலத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் செடி,கொடிகள் எரிந்து சேதமாயின. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பகுத்தம்பாளையம் பகுதியில் காங்கேயம... மேலும் பார்க்க

மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் விடுதி திறப்பு

அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் தங்கும் விடுதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தியூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு, மாணவா் விடுதி ஏற... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

அந்தியூா் அருகே வனப் பகுதியை ஒட்டியுள்ள கரும்புத் தோட்டத்தில் குட்டியுடன் நடமாடும் சிறுத்தையால் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. அந்தியூரை அடுத்த செலம்பூரம்மன் கோயில், கோவிலூா் ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாள... மேலும் பார்க்க

அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்

பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தமிழக மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா். ஈரோட... மேலும் பார்க்க

பெருந்துறையில் சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணா்வு பேரணி

பெருந்துறையில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், எலைட் & பிரைட் ஜேசீஸ் சங்கங்கள் மற்றும் ஈங்கூா் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணா்வுப் ... மேலும் பார்க்க