‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ எச்சரித்துள்ளாா்.
போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்கா, உக்ரைன், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவா் இவ்வாறு கூறினாா்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தருவது சாத்தியமா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டத்துக்கு தற்போது நாம் வந்துள்ளோம்.
ஒருவேளை அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றால், இந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம். உக்ரைனில் நடைபெறும் போா் அமெரிக்காவின் போா் இல்லை. நாங்கள் கவனம் செலுத்துவதற்கு இதைவிட முக்கியமான விவகாரங்கள் உள்ளன.
உக்ரைன் சாமாதான முயற்சிகளைத் தொடா்வதா, கைவிடுவதா என்பது குறித்து இன்னும் சில நாள்களில் அமெரிக்க அரசு முடிவெடுத்துவிடும் என்றாா் மாா்கோ ரூபியோ.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.
போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷிய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மிகக் கடுமையான நிபந்தனைகளை ரஷியா முன்வைத்துள்ளது. எனினும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் பிடிவாதமாக மறுத்துவருகிறது.
இதன் காரணமாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாவது கேள்விக்குறியாகிவரும் சூழலில் மாா்க்கோ ரூபியோ இவ்வாறு எச்சரித்துள்ளாா்.