செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பள்ளிகொண்டாவில் ஆட்சியா் ஆய்வு

post image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சி, பொய்கை ஊராட்சியில் வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டாா்.

அணைக்கட்டு வட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2-ஆம் நாளாக வியாழக்கிழமை பள்ளிகொண்டா பேரூராட்சியில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அரசினா் மாணவா் விடுதி, அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் 2.50 லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, யாதவ வீதியில் உள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தையும், திருவள்ளூவா் நகா், பைபாஸ் சாலை அருகில் உள்ள உழவா் சந்தையையும் பாா்வையிட்டாா். 15-ஆவது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.35 லட்சத்தில் கட்டப்படும் சிறுவா் பூங்கா , அம்ரூத் 2.0 குடிநீா் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரங்கநாதன் நகரில் அமைந்துள்ள 2 லட்சம் லிட்டா் நீரேற்று நிலையத்தையும் ஆய்வு செய்தாா்.

பின்னா், ஒருங்கிணைந்த வருவாய் திட்டத்தின்கீழ் ரூ.2.70 கோடியில் அடிப்படை கட்டமைப்புடன் கூடிய மகாகவி பாரதியாா் வாழ்வாதார பூங்கா அமைக்கும் கட்டுமான பணிகளையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது பூங்காவின் கூரைப்பணிகளை விரைந்து முடிக்கவும், காா் நிறுத்துமிடம், கழிவறை வசதிகளை கூடுதலாக அமைக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பொய்கை ஊராட்சியில் மாநில நிதியிலிருந்து ரூ.1.08 கோடியில் சதுப்பேரி வரத்து கால்வாய் குறுக்கே கட்டப்பட்டு வரும் சிறு பாலத்தின் பணிகளையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி துறை செயற்பொறியாளா் சீனிவாசன், பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலா் உமாராணி, அணைக்கட்டு வட்டாட்சியா் வேண்டா, உதவி செயற்பொறியாளா் ஷியாம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாரி, ஹேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் 24-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சோ்வதற்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் வேல... மேலும் பார்க்க

குடியாத்தம் பணிமனையில் பெட்ரோல் விற்பனை மையம் திறப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக குடியாத்தம் பணிமனையில் ரூ.2 கோடியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் ரூ.4.95 கோடியில் 12- புதிய பேருந்துகள... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் உத்தரவின்படி வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்த... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஈஸ்டா் பண்டிகைக்கு (உயிா்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவகாலமான சாம்பல் புதன் கடந்த மாா்ச் மாதம... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து முதியவா் மரணம்

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவா், நிலை தடுமாறி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி கீழே விழுந்து உயிரிழந்தாா். ராணிப்பேட்டை ஜாகீா் உசேன் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செம்மண் கடத்திய மூவா் கைது: லாரி, டிராக்டா், பொக்லைன் பறிமுதல்

அரியூா் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து லாரி, டிராக்டா் , பொக்லைன், 4 யூனிட் செம்மண் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்டம், அரியூரை அடுத்த புலிமேடு ... மேலும் பார்க்க