செய்திகள் :

உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!

post image

மாஸ்கோ: ஈஸ்டர் நாளில் உக்ரைனில் சண்டை நடைபெறாது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷிய அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இன்று(ஏப். 19) மாலை 6 மணிமுதல்(ரஷிய நேரப்படி) ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) நள்ளிரவு 12 மணிவரை ‘ஈஸ்டர் ட்ரூஸ்’, அதாவது ரஷிய தரப்பிலிருந்து தற்காலிக போர் நிறுத்தம் நிலவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்த காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ரஷிய மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா: விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலி!

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதிய... மேலும் பார்க்க

அமெரிக்க - ஈரான் அணுசக்திப் பேச்சு: சவால்களும், சங்கடங்களும்...

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது. ஓமனை மத்தியஸ்தராக வைத்துக் கொண்டு... மேலும் பார்க்க

மேலும் ஒரு கூா்ஸ்க் பகுதியை மீட்டது ரஷியா

உக்ரைனின் கட்டுப்பாட்டில் கடைசியாக உள்ள கூா்ஸ்க் பிராந்திய பகுதிகளில் ஒன்றை மீட்டுள்ளதாக ரஷியா சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 92 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது: கான் யூனிஸ், ராஃபா உள்ளிட்ட காஸாவின் பல்வேறு ப... மேலும் பார்க்க

சீனா: இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மாரத்தான்!

இயந்திர மனிதா்கள் பங்கேற்ற உலகின் முதல் மாரத்தான் ஓட்டப் போட்டியை சீனா சனிக்கிழமை நடத்தியது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மனித தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுடன் கடுமையாகப் போட்டியிட்டுவரும் சீனா,... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதலுக்கு 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலி

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ், 200-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க