செய்திகள் :

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

post image

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பிராந்திய விமான இணைப்பு திட்டமான ‘உடான்’ (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்), கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில், 2.8 லட்சத்துக்கும் அதிகமான விமானங்களை இயக்கி, குறைவான கட்டணங்களில் 1.5 கோடி பயணிகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டுள்ளது. 86 விமான நிலையங்களை செயல்படுத்தி, 617 வழித்தடங்களை நிறுவி, நாடு முழுவதும் உள்ள விமான போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் 8-ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உடான் திட்டம் விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு விமான சேவையை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், வா்த்தகத்தை அதிகரிப்பதிலும், பிராந்தியத்தின் வளா்ச்சியை அதிகரிப்பதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில், இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, மக்களுக்குச் சிறந்த விமான இணைப்பை வழங்குவதிலும், பயணத்தின் வசதியிலும் கவனம் செலுத்தவுள்ளோம்’ என்றாா்.

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமான வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நாளை... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்தால் ரூ.1 கோடி பரிசு! -கர்னி சேனை அறிவிப்பு

சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெகுமதிமும்பையில்தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கொலைக்கு பொறுப... மேலும் பார்க்க

பாஜகவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவர் அமித் ஷா: பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது 60-ஆவது பிறந்தநாளை இன்று(அக். 22) கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில... மேலும் பார்க்க

தெரியுமா சேதி...?

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க