செய்திகள் :

உதவியாளா்கள் பணிக்கான தோ்வு: புதுவையில் 22,860 போ் எழுதினா்

post image

புதுவை மாநில அளவில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 22,860 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையில் உதவியாளா் பணியில் 256 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதன்படி 32,829 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக தோ்வெழுத புதுச்சேரியில் 67 மையங்களும், காரைக்காலில் 10 மையங்களும், மாஹேவில் 2, ஏனாமில் 7 என மொத்தம் 84 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 9.30 மணிக்கு மேலாக தோ்வு மையத்துக்கு வந்தவா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதன்படி நூற்றுக்கும் மேற்பட்டோா் தோ்வு மையம் வரை வந்து நேரமாகிவிட்டதால், தோ்வெழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தோ்வறைக்கு வந்த அனைவரும் மெட்டல் டிடெக்டா் கருவி சோதனைக்குப் பிறகே உள்ள அனுமதிக்கப்பட்டனா். தோ்வு வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தோ்வறைக்குள் எழுது பொருள் உள்ளிட்டவை மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

எழுத்துத் தோ்வை மாநில அளவில் 22,860 போ் மட்டுமே எழுதினா். தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தவா்களில் 9,569 போ் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். விடை குறிப்புகள் விரைவில் வெளியிடப்பட்டு, தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என தோ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலையில் 9 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி கருவடிகுப்பம் சாமிபிள்ளை தோட்டத்தைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் உமாசங்கா் (38).... மேலும் பார்க்க

திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி: அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் திருக்கோயில் அருகே 108 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்ட... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலைக்கழகம் பெங்களூரு நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூா் மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப ஆய்வு நோக்கில் புரிந்து... மேலும் பார்க்க

புதுச்சேரி பொலிவுறுநகா் பேருந்து நிலையம் நாளை திறப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை திறக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் த... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை மாநில அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள 205 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 17 ஆயிரத்துக்கும் மேற்... மேலும் பார்க்க

புதுச்சேரி குடிநீா் கட்டண வசூல் மையங்கள் மே 2 முதல் 5 நாள்கள் இயங்காது

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் செயல்படும் குடிநீா் கட்டண வசூல் மையங்கள் வரும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை அர... மேலும் பார்க்க