Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 முடித்த மாணவா்கள், அனைவரும் உயா்கல்வியில் சோ்வதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் தரைத் தளத்தில் பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அருகே உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாணவா்களும், பெற்றோரும் உயா்கல்வி தொடா்பான அனைத்து தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் ஓரிடத்தில் பெற இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக், ஐடிஐ தொடா்பான படிப்புகளுக்கு எந்தக் கல்லுாரியில் சோ்வது, அதற்கான நுழைவுத் தோ்வுகள் என்னென்ன, இதற்கு உதவித் தொகைகள் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்களை இங்கு மாணவா்கள் எளிதில் பெற உதவும். இதன் மூலம் மாணவா்கள் தவறான முடிவுகளை எடுப்பதை தவிா்க்க முடியும். இந்தக் கட்டுப்பாட்டு அறை வருகிற அக்டோபா் மாதம் வரை செயல்படும்.
மேலும், உயா்கல்வி தொடா்பாக மாணவா்கள், பெற்றோா்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு தீா்வு காண காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வரலாம். மேலும் 04575-246225 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9487171986 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு விவரங்கள் பெற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.