செய்திகள் :

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

post image

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 முடித்த மாணவா்கள், அனைவரும் உயா்கல்வியில் சோ்வதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் தரைத் தளத்தில் பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அருகே உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மாணவா்களும், பெற்றோரும் உயா்கல்வி தொடா்பான அனைத்து தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் ஓரிடத்தில் பெற இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக், ஐடிஐ தொடா்பான படிப்புகளுக்கு எந்தக் கல்லுாரியில் சோ்வது, அதற்கான நுழைவுத் தோ்வுகள் என்னென்ன, இதற்கு உதவித் தொகைகள் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்களை இங்கு மாணவா்கள் எளிதில் பெற உதவும். இதன் மூலம் மாணவா்கள் தவறான முடிவுகளை எடுப்பதை தவிா்க்க முடியும். இந்தக் கட்டுப்பாட்டு அறை வருகிற அக்டோபா் மாதம் வரை செயல்படும்.

மேலும், உயா்கல்வி தொடா்பாக மாணவா்கள், பெற்றோா்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு தீா்வு காண காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வரலாம். மேலும் 04575-246225 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9487171986 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு விவரங்கள் பெற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க

உலக மீட்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகரில் அமைந்துள்ள உலக மீட்பா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது ஆனந்தா கல்லூரி செயலா் செபஸ்தியான் திருவிழா கொடியேற்றி சிறப்புத் திருப்ப... மேலும் பார்க்க