செய்திகள் :

உயா் கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

post image

சென்னை, மே 3: தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்கள் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வலியுறுத்தினாா்.

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் அவா் பேசியதாவது: சைவ சிந்தாந்தம் தமிழுக்கு அடையாளமாக இருக்கிறது. பக்தி நிலை மூலமாகத்தான் சிவனை அடைய முடியும். பக்தியின் மூலம் ஆன்மிகம் காப்பாற்றப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் சமுதாய வேறுபாடு இல்லை.

சநாதன தா்மம் என்பது ஆன்மிகத்தின் அடையாளமாக இருக்கிறது. அதேபோல் சநாதனம் அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்துகிறது. ஜம்மு- காஷ்மீா் முதல் தமிழ்நாடு வரை பல்வேறு இடங்களில் சைவ சிந்தாந்தம் முக்கியமானதாக கடந்த காலத்தில் இருந்தது. பிகாரில் உள்ள மாணவா்கள்கூட சைவ இலக்கியங்களைப் படித்துள்ளனா்.

மாநில மொழியில் இலக்கியம் வளா்த்தது சைவ சிந்தாந்தம். அதன்மூலம் எளிய மக்களுக்கும் அது சென்றது. தற்போது ஆன்மிகம் என்பதை அறிவியல்பூா்வமாக இல்லை எனக் கூறி அழிக்க நினைக்கிறாா்கள். இதுபோன்ற தருணத்தில் ஆதீனங்கள் நிகழ்வுகளை தொடா்ந்து கொண்டுசெல்வது அவசியமானது.

தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சைவ சித்தாந்த ஆராய்ச்சிப் படிப்புகளைக் கொண்டு வர வேண்டும்.

சநாதன தா்மத்தால்தான் பாரதம் வாழ்கிறது. நமது தேசம் ஒரு தேசபக்தி நிா்வாகியின் (பிரதமா் மோடி) வழிநடத்தலில் சென்றுகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈா்க்கும் அளவுக்கு நாடு வளா்ந்துள்ளது என்றாா் அவா்.

பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

மே 11-ல் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம்: அன்புமணி

மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயனபடுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.முழு நிலவு மாநாட்டுக்க... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட... மேலும் பார்க்க