செய்திகள் :

உ.பி. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்த பாஜக!

post image

உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

தில்லி பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுடன் உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் பேரவைத் தொகுதிக்கும் கடந்த பிப். 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று(சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மில்கிபூர் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரே முன்னிலை பெற்று வருகிறார்.

மொத்தம் 30 சுற்றுகளில் 26 ஆவது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் 1,30,901 வாக்குகள் பெற்றுள்ளார்.

சமாஜவாதி வேட்பாளர் அஜித் பிரசாத் 76,082 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார்.

பாஜக வேட்பாளர் 59,084 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அவரது வெற்றி உறுதியாகிறது. தில்லி தேர்தலுடன் உ.பி. இடைதேர்தலிலும் பாஜக வெற்றியையடுத்து கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!

மில்கிபூர் தொகுதி, அயோத்தி மாவட்டத்தில் உள்ள தொகுதியாகும். கடந்த 2022 பேரவைத் தேர்தலில் அயோத்தி மாவட்டத்தில் பாஜக இழந்த ஒரே தொகுதி இதுவாகும். தற்போது இடைத்தேர்தல் மூலமாக அந்த தொகுதியையும் பாஜக கைப்பற்றுகிறது.

கடந்த பேரவைத் தேர்தலில் சமாஜவாதியின் அவதேஷ் பிரசாத், மில்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் 2024 மக்களவைத் தேர்தலில் பைசாபாத் எம்.பி.யாக தேர்வான நிலையில் எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும்: திருமாவளவன்

கொல்கத்தா பெண் மருத்துவரின் பெற்றோரை சந்தித்த மோகன் பாகவத்

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சனிக்கிழமை சந்தித்தார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ராஜஸ்தான், மத்தியப் பிரதேச முதல்வர்கள் புனித நீராடல்

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் சனிக்கிழமை திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.அப்போது மகா கும்பமேளா ஏற்பாடுக... மேலும் பார்க்க

நல்லாட்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த தில்லி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். 70 தொ... மேலும் பார்க்க

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: தில்லி தோல்வி குறித்து கேஜரிவால்

தில்லி பேரவைத் தேர்தல் குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், தில்லிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. மக்களின் தீ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: அரவிந்த் கேஜரிவால் தோல்வி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தோல்வி அடைந்துள்ளார்.70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ல் நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான... மேலும் பார்க்க

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: பிரியங்கா

தலைநகரில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை தெரிவித்தார். தில்லியில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி தோல்வியைத் தேர்தல... மேலும் பார்க்க