செய்திகள் :

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

post image

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்று வருகிறது. இதில் ஆங்கில பாடத்துக்கான தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வையொட்டி ஹா்தோய் மாவட்டம் கட்டியாமெளவ் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் முறைகேடுகள் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அங்கு மாவட்ட பள்ளிகள் ஆய்வாளருடன் இணைந்து மாநில சிறப்புப் பணிக் குழு சோதனை மேற்கொண்டது. அத்துடன் அந்தப் பள்ளியில் இருந்து 3 முதல் 4 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளி முதல்வா் வீட்டிலும் அந்தக் குழு சோதனை செய்தது.

அப்போது அந்த வீட்டில் 5 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 14 போ் முறைகேடாக ஆங்கில பாட வினாத்தாளுக்கு விடைகள் எழுதி வந்தது தெரியவந்தது. அவா்களில் ஒருவா் தன்னை பள்ளி ஆசிரியா் என்று தெரிவித்தாா். 14 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களிடம் இருந்து 20 விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல ஹா்தோய் மாவட்டத்தின் தலேல் நகா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளிக்கு எதிரே, வினாத்தாளுக்கு விடை எழுதி வந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவித்தன.

பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது குறித்து தெற்கு ரயி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 போ் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்ற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க