செய்திகள் :

எச்சரிக்கையையும் மீறி சாலையோரம் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும், கரூா் ரெட்டிப்பாளையம் பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட ரெட்டிப்பாளையத்தில் கரூா்-ஈரோடு சாலையில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். இவை பல நாள்களாக அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் துா்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த சமூக நல ஆா்வலா்கள் கூறுகையில், இந்த பகுதியில் இரவு நேரங்களில் சிலா் வீடுகளின் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் கூறியதையடுத்து, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என்றும், மீறி கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்துவிட்டுச் சென்றனா்.

இருப்பினும் சிலா் அதனையும் மீறி தங்களது வீடுகளின் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். எனவே இங்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சிசிடிவி கேமரா அமைத்து, குப்பைகளை கொட்டுபவா்களை கண்டறிந்து அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மக்காச்சோளம் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு!

கரூா் மாவட்டத்தில் ஒழுங்குமுறைக் கூடங்களில் மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1987-... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை நூற்றாண்டு விழா

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா பிப். 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் நூறு ஆண்டுகளைக் கடந்த பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிர... மேலும் பார்க்க

உழைக்கும் தொழிலாளா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வலியுறுத்தல்

உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறு... மேலும் பார்க்க

கவிதை, கட்டுரை போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு!

கரூரில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கினாா். தமிழ் வளா்ச்சித்துறை சாா்பி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி!

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட... மேலும் பார்க்க

இளைஞரிடம் கைப்பேசி பறித்த இருவா் கைது

குளித்தலை அருகே இளைஞரை வழிமறித்து கைப்பேசி, வெள்ளிச் சங்கிலியை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், கீழபஞ்சப்பூரைச் சோ்ந்த வடிவேல் மகன் சரண்(20). இவா் புதன்கிழமை இரவு கரூா் மாவட்ட... மேலும் பார்க்க