செய்திகள் :

``எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது; அது தற்கொலைக்கு சமம்'' – தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்

post image

"ஓபிஎஸ்-சும் நானும் கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுதான்" என்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் சுதந்திரமானவன். அமமுக எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி.

பழனிசாமியை முதல்வராக நான் ஏற்றுக் கொள்வேன் என்று பிறர் நினைத்தது என் தவறல்ல. அமித்ஷா தான் எல்லோரையும் ஓரணியில் இணைக்க வேண்டும் என முயற்சி செய்தார். கூட்டணியில் சமரசம் ஏற்பட ஓபிஎஸ்சுடன் பேசத் தயார் என நயினார் நாகேந்திரன் இப்போது சும்மா பேசுகிறார்.

அதிமுகவுடன் அமமுக தொண்டர்கள் ஒத்து போக மாட்டார்கள். அதிமுகவைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வர் ஆவார் என அமித்ஷா கூறினார். அவர் கூறும் முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தான் ஆதரிப்போம் என ஏற்கனவே கூறியிருந்தேன். நாங்கள் எப்படி பழனிசாமியை ஏற்றுக் கொள்ள முடியும்?

ஓபிஎஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது எடுக்காமல் தவிர்த்த நயினார் நாகேந்திரன், இப்போது சமரசம் பேசுவதாக அழைப்பது அகங்காரம் மற்றும் ஆணவத்தை காட்டுகிறது.

`எனக்காக விட்டு கொடுத்தவர் ஓபிஎஸ்'

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

எனக்காக தேனி தொகுதியை விட்டு கொடுத்தவர் ஓபிஎஸ். நானும் ஓபிஎஸ்-சும் ஒன்றாக பயணிப்போம். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது, சுயக் கௌரவம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவருக்காக நான் குரல் கொடுப்பேன்.

நாங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதற்கு அண்ணாமலை காரணமல்ல. அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உரிய மரியாதை அளித்தார். எங்கள் பின்நிலையில் அண்ணாமலை இருப்பதாக அரசியல் தெரியாதவர்கள் கூறுகின்றனர்.

நயினார் நாகேந்திரன்

எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பது தற்கொலைக்கு சமம். எடப்பாடி மட்டும் போதும் என நயினார் நாகேந்திரன் நினைக்கிறார். தமிழக மக்களின் மனநிலை அவருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் புரியவில்லை.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

எங்கள் வழியில் நாங்கள் செல்கிறோம். தொண்டர்களின் முடிவைத் தாண்டி நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. தொண்டர்களின் எதிர்காலத்தை கருதி நான் நல்ல முடிவு எடுப்பேன்.

டிடிவி தினகரன் - தவெக விஜய்
டிடிவி தினகரன் - தவெக விஜய்

தவெக விஜய்

எங்களை விமர்சிக்காத வரை விஜய்யை நாங்கள் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் மக்கள் விரும்பும் நடிகர். அவரைப் பார்த்து பொறாமைப்பட தேவையில்லை.

நீங்கள் நினைக்காத கூட்டணி எல்லாம் அமைக்க வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்.

நடிகர் விஜயகாந்தைப் போல ஒரு அரசியல் தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்பது யதார்த்தம்.

எடப்பாடி பழனிசாமி

`நாங்கள் பொறுப்பல்ல'

துரோகம் செய்த எடப்பாடியுடன் உள்ள சிலரைத் தவிர பிறர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் தொடர்ந்து அமைதி காத்தால், வரும் தேர்தலுக்குப் பின்னர் பெரும் பின்னடைவை சந்திப்பார்கள்.

தேர்தலுக்கு முன்னரே விழித்துக் கொள்ளுங்கள். எங்களிடம் பண பலம் இருக்கிறது, இரட்டை இலை சின்னம் இருக்கிறது என எண்ணி தேர்தலை சந்தித்தால், அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது," என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' - தளவாய் சுந்தரம் கேள்வி

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சொந்த சுற்றுப்பயணம். தமிழகத்திற்கு எந்த நிதியு... மேலும் பார்க்க

``மதுரை விமான நிலைய பெயர்; மக்கள் நலனை மறந்து EPS பேசுகிறார்'' - கிருஷ்ணசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்... மேலும் பார்க்க

``அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம்; ஆனால்'' - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், நிலகோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி தொகுதிகளில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்தார் மக்கள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்: ``6 மாதத்தில் 10,000 முகாம்கள் இயலாத காரியம்'' -புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்"நாளொன்றிற்கு 3000 மனுக்கள் பெறப்பட்டாலும் பெண் அலுவலர்கள் என்று கூட பாராமல் இரவு 12 மணி வரை மனுக்களை பதிவேற்றம் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்" என்ற... மேலும் பார்க்க

Trump: ``ட்ரம்ப் தன் தவறை உணரத் தொடங்கியுள்ளார்'' - கே.பி. ஃபேபியனின் அனுபவப் பகிர்வு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது விதித்த பெரும் வர்த்தக வரிகள் தொடர்பான கடுமையான நிலைப்பாட்டை கடந்த சில நாட்களாக மென்மையாக்கி வருவதாக முன்னாள் இந்திய தூதர் கே.பி. ஃபேபியன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

Laughter therapy: சிரிப்பு சிகிச்சை உண்மையிலேயே பயன் அளிக்குமா? நிபுணர் விளக்கம்!

சிரிக்காத நாள், நம் வாழ்நாளில் வீணான ஒரு நாள் என்று பலரும் கூறிக் கேள்விப்பட்டிருப்போம். சிலர் அறையே அதிரும் அளவுக்கு சிரிப்பார்கள்; சிலரின் புன்முறுவலே அவர்களின் அதிகபட்ச சிரிப்பாக இருக்கும். ஆனால், ... மேலும் பார்க்க