செய்திகள் :

``எனது அமைதி வெற்றிக்கான அறிகுறி" - சொல்கிறார் செங்கோட்டையன்

post image

அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவியைப் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் அமைதி காத்து வருகிறார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "கட்சியின் எதிர்கால நலன் கருதியே அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினேன். ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. என் ஆதரவாளர்கள் நீக்கப்படுவதை அவர்கள் செய்துகொண்டேதான் இருப்பார்கள். ஆனால், விரைவில் நன்மை நடக்கும். அவர்களது நடவடிக்கை அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது; தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனது அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி. ஒருங்கிணைப்பு குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வருகை குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அன்று நான் சென்னை சென்று விட்டேன். எனக்கு வழிகாட்டி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாதான். அவர்கள் வழியில் நான் பயணித்து வருகிறேன்" என்றார்

ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை

ராமநாதபுரத்தில் நீண்ட காலமாக ரயில் நிலையம் எதிரே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்டபோது போதிய வசதிகளுடன் வாராந்திர சந்தை பகுதியில் புதிய பேருந்து ... மேலும் பார்க்க

"நாயக வழிபாடு, கும்பல் மனநிலை; எப்போது முழுமையான தலைவராவார் விஜய்?" - உளவியல் ஆலோசகர் சிந்து பேட்டி

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பயணம், 41 மரணங்களுடன் சோகமான நிகழ்வாக முடிவடைந்திருக்கிறது. இந்த அசம்பாவிதத்திற்கு தவெக-வின் முறைப்படுத்தப்படாத செயல்பாடுகளும் விஜய்யின் கால தாமதமு... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்... மேலும் பார்க்க

மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதலுக்கு யார் காரணம்? - விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் ஜெப ஆலயத்துக்கு வெளியே நடந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்:நேற்று (2-ம் தேதி) 09:30 மணிக்குப... மேலும் பார்க்க

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு செல்லாத நீங்கள்...' - ஸ்டாலினை விமர்சிக்கும் அண்ணாமலை

கரூரில் நடந்த சம்பவத்தை விசாரிக்க எம்.பி குழுவை அமைக்கப்பட்டதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்வினையாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை... மேலும் பார்க்க