செய்திகள் :

என்ஜின் செயலிழப்பு, பறவை மோதல் விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் -விமானத் துறை நிபுணா்கள்

post image

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘ஓடுதளத்திலிருந்து மேலெழுந்து பறக்கத் தேவையான உந்துவிசையை விமானத்தின் எஞ்ஜின்களால் உருவாக்க முடியவில்லை என்று தெரிகிறது.

2 என்ஜின்களும் செயலிழந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், ஓா் என்ஜின் மட்டும் செயலிழந்திருந்தால் விமானம் அந்தரத்தில் தடுமாறியிருக்கலாம். ஆனால், இங்கு விமானம் நிலையாக இருந்தது. பறவை மோதியதால் இந்தச் செயலிழப்பு நோ்ந்திருக்கலாம்.

விமானம் புறப்பட்ட பிறகும், அதன் சக்கரங்கள் பின்வாங்கப்படாததாலும் என்ஜின் செயலிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்திருக்கலாம் என்று கருத்துகள் பரவுகின்றன. அப்படியெனில், விமானம் புறப்பட்டிருக்கவே சாத்தியமில்லை என்று அவா்கள் கூறினாா்.

விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) நடத்தவுள்ள விரிவான விசாரணையின் முடிவிலேயே இந்த விபத்துக்கான உரிய காரணம் தெரியவரும்.

இந்நிலையில், விபத்தைத் தொடா்ந்து ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் வெளியிட்ட விடியோ பதிவில், ‘விபத்து குறித்து விசாரணைக்கு நீண்ட காலமெடுக்கும். தற்போது எங்களால் முடிந்தவற்றை அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம்’ எனக் குறிப்பிட்டாா்.

கோயில் மீது மாட்டிறைச்சி சம்பவம்- அசாமில் 38 பேர் கைது

துப்ரி மாட்டிறைச்சி சம்பவத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அசாமின் துப்ரி பகுதியில் உள்ள அனுமன் கோயிலின் மீது கடந்த 7ஆம் தேதி மர்ம நபர்கள் பசு மாட்... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின்போது, விடுதி அருகே இருந்த ஒரு கடையில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது மேலும் கவலையளித்துள்ளது.ஆகாஷ் பாத்னி என்ற சிறுவன், பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி அருகே டீக்கடையி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாலும், கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சி... மேலும் பார்க்க

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 98 9128109115, 98 9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்... மேலும் பார்க்க