செய்திகள் :

'என்னாலயே நம்ப முடியல...' - ஆஸியை வீழ்த்தியது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்!

post image

பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சியாக பேசியவை இங்கே.

Team India
Team India

ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, ''ரொம்பவே பெருமையாக இருக்கிறது. என்னாலயே நம்பவே முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் எதை எதிர்பார்த்தோமோ அது நடந்திருக்கிறது. இந்தத் தொடரில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். ஆனால், செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம். எங்களுக்கு சாதகமான ரிசல்ட்டை மட்டுமே கொடுக்கும் வகையிலான பெர்பார்மென்ஸை கொடுக்க வேண்டிய நாள் இது.

நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். அணிக்காக எதையும் செய்ய வேண்டும் என்கிற மனநிலையில் இருந்தோம். மூன்று போட்டிகளில் வரிசையாக தோற்ற போது எங்களின் திட்டங்களை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என்பதை உணர்ந்தோம். குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் நாங்கள் கடுமையாக சொதப்பினோம். ஜெமிமா ஆடியிருப்பது ஒரு அற்புதமான இன்னிங்ஸ். அவர் எப்போதுமே அணிக்காக பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடக்கூடியவர். கால்குலேட்டிவ்வாக இன்னிங்ஸை கட்டமைக்கக் கூடிய அவர் மீது எங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு.

ஜெமிமா
ஜெமிமா

கிட்டத்தட்ட அவரை ஒரு கணிதவியல் நிபுணர் எனக் கூட சொல்லலாம். அவருடன் மகிழ்ந்து பேட்டிங் ஆடினேன். அவரை பார்த்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இந்த ஓவரில் 5 ரன்களை சேர்த்துவிட்டோம். இன்னும் 2 பந்துகள்தான் மீதமிருக்கிறது என எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார். அதன்மூலம் நம்மையும் ஊக்கப்படுத்திவிடுவார். இப்போதே நாங்கள் இறுதிப்போட்டியை பற்றி பேச தொடங்கிவிட்டோம். இந்த உலகக்கோப்பையை வென்றே ஆக வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். ரசிகர்களின் அன்பால் நாங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்தோம். இந்த தேசமே எங்களுக்கு பின்னால் இருப்பதாக உணர்கிறோம். தொடர்ந்து தோற்ற போது கூட உங்களால் எப்போது வேண்டுமானாலும் கம்பேக் கொடுக்க முடியுமென ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்காக இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்.' என்றார்.

'அவளுக்கு கிரிக்கெட் செட் ஆகாது' - நிராகரிப்புகளை தகர்த்தெறிந்த ஜெமிமாவின் கதை! | Jemimah Rodrigues

எட்டு வயது சிறுமி அவள். வீட்டில் அத்தனை துறுதுறுப்பாக இருப்பாள். அண்ணன்கள் இருவரும் கிரிக்கெட் ஆடக்கூடியவர்கள். எனர்ஜியாக சுற்றித்திரியும் அந்த சிறுமியையும் கிரிக்கெட் ஆட அனுப்பி வைக்கலாம் என பெற்றோர்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்! - 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தை வென்ற இளம்பரிதி!

நேற்று சென்னையை சேர்ந்த இளம்பரிதி ஏ.ஆர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபனில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுபவர்களில் இவர் ... மேலும் பார்க்க

Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த கண்ணீருடன் ஜெமிமா!

பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. சவால் நிறைந்த இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஜெமிமா சிறப்பாக ஆடி சதமடித... மேலும் பார்க்க

Ind v Aus : 'ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா!' - ஆட்டத்தை மாற்றிய குயின் ஜெமிமா!

பெண்கள் உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ... மேலும் பார்க்க

"என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆசைப்படுகிறேன்" - கண்ணனி நகர் கார்த்திகாவை பாராட்டிய சரத்குமார்

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன. இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச... மேலும் பார்க்க

ஆல் அவுட் ஆனாலும் 339 டார்கெட் வைத்த ஆஸ்திரேலியா; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா.இன்று இரண்டாவது அரையிறுதிப்போட்ட... மேலும் பார்க்க