செய்திகள் :

`என்னை மன்னிச்சிருங்க; சூழல் சரியில்ல...' - கரூர் குடும்பத்தினரிடம் விஜய் உருக்கம்!

post image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். இந்தச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்றிரவே கரூரிலிருந்து மாமல்லபுரம் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒரு தனியார் விடுதியில் அத்தனை குடும்பத்தினரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கரூர் விஜய் கூட்டம்
கரூர் விஜய் கூட்டம்

அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற விஜய் இன்று காலை எட்டரை மணியளவில் தனியார் விடுதிக்கு வந்து சேர்ந்தார். காலை 9 மணிக்கு சந்திப்பு தொடங்கியது.

ஒவ்வொரு குடும்பத்தினராக தனித்தனியாகச் சந்தித்த விஜய் 15-லிருந்து 20 நிமிடங்கள் வரைக்கும் ஒவ்வொரு குடும்பத்தினிரிடமும் மனம் விட்டு பேசியிருக்கிறார்.

அவர்களிடம் துக்கம் கேட்டு ஆறுதல் கூறிய விஜய், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டு தெரிந்திருக்கிறார். அத்தனைக் குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளையும் ஏற்பதாக உறுதியளித்திருக்கிறார்.

கரூரில் ஏமூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலின் மனைவியும் 9-ம் வகுப்பு படிக்கும் மகளும் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்திருந்தனர். விஜய்யைச் சந்திக்க அவரும் மாமல்லபுரம் வந்திருந்தார்.

விஜய்யிடம் பேசிவிட்டு வெளியே வந்தவரிடம் பேசினோம். அப்போது அவர், ``ரெண்டு நாளைக்கு முன்னாடி த.வெ.க கட்சி ஆளுங்க வீட்டுக்கு வந்து நிலைமையை எடுத்துச் சொல்லி சென்னை வரணும்னு அழைப்பு விடுத்தாங்க.

அவங்களே எல்லாம் ஏற்பாடு பண்ணி கூட்டிட்டு வந்தாங்க. விஜய் ஒரு 20 நிமிசம் பேசுனாரு. ஆறுதல் சொன்னாரு.

Vijay TVK - விஜய் த.வெ.க

`என்னை மன்னிச்சிருங்க. நான் கரூர் வந்து உங்களை நேர்ல பாத்திருக்கணும். ஆனா, இப்போ சூழல் சரியில்ல. அதனாலதான் உங்களை சென்னை கூட்டிட்டு வர வேண்டியதா போச்சு. உங்க இழப்பையெல்லாம் ஈடு செய்யவே முடியாது.

என்னை மன்னிச்சிருங்க. உங்க குடும்பத்துல ஒருத்தனா உங்களோட என்னைக்குமே இருப்பேன். உங்களோட தேவைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்'னு சொன்னாரு.

நாங்க அவரை பார்த்துட்டு வெளியே வந்துட்டோம். இன்னும் மீட்டிங் தொடர்ந்து போயிட்டு இருக்கு.' என்றார்.

`மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு; விஜய் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது!' - ஓபிஎஸ்

சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குரு பூஜையில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓ பன்னீர் செல்வம் மருது பாண... மேலும் பார்க்க

பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தடை! – புதுச்சேரி தொழிலாளர் துறை உத்தரவு

புதுச்சேரி தொழிலாளர் துறையின் செயலர் ஸ்மித்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 66, துணைப் பிரிவுகள் (1) (b) விதிமுறையின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின்படி, பு... மேலும் பார்க்க

"மாநாடு முடியற வரைக்கும் அந்தக் கட்சியின் தொண்டனாவே மாறிடுவேன்" - 'பந்தல்' சிவா பேட்டி

இன்னும் சில மாதங்களே இருக்கின்றன 2026 சட்டசபைத் தேர்தலுக்கு. தேர்தல் வந்தால் மாநாடு, பொதுக்கூட்டம், பிரசாரம் என அரசியல் கட்சிகள் பிசியாகி விடுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கட்சிகளுடன் சேர்ந்து இன்னொரு மு... மேலும் பார்க்க

'15 ஆண்டுகளாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம்; எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா' - பரபரக்கும் போஸ்டர்

கடந்த செப்டம்பர் மாதம் 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பத்தினரை இன்று சென்னை... மேலும் பார்க்க

"தவெக எனும் புதுக்கட்சியை திமுக வளர விடாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

"திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எழுதி வைத்து கொள்ளுங்கள், தமிழகம் முழுதும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும... மேலும் பார்க்க

மலேசியாவில் மார்கோ ரூபியோவை சந்தித்த ஜெய்சங்கர்; வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பாசிட்டிவ் சிக்னல்?

தற்போது மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு நடந்து வருகிறது.இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப், பிரேசில் ... மேலும் பார்க்க