எம்புரான் டிரைலரை பார்த்த ரஜினி என்ன சொன்னார்?
நடிகர் ரஜினிகாந்த் எம்புரான் டிரைலர் பார்த்ததை ப்ரித்விராஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.
மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இதையும் படிக்க: திட்டமிட்டபடி கூலி படப்பிடிப்பை முடித்த லோகேஷ் கனகராஜ்!
எம்புரான் படத்தின் டீசர் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரித்விராஜ், “எம்புரான் டிரைலரை பார்த்த பின் நீங்கள் என்னிடம் சொன்னவை என் வாழ்நாளுக்குமானது. இந்த உலகமே எனக்கானதுபோல் இருக்கிறது. ஒரிஜினல் சூப்பர்ஸ்டாரே, நான் எப்போதும் உங்களின் தீவிர ரசிகன்” எனத் தெரிவித்துள்ளார்.
The very first person to watch the trailer of #L2E#EMPURAAN I will forever cherish what you said after watching it Sir! This meant the world to me! Fanboy forever! @rajinikanth#OGSuperstarpic.twitter.com/Dz2EmepqdZ
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 18, 2025
எம்புரான் படமே மோகன்லால் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமென்பது குறிப்பிடத்தக்கது.