செய்திகள் :

எரிவாயு டேங்கர் லாரிகள் 4-ஆவது நாளாக இன்றும் வேலைநிறுத்தம்!

post image

நாமக்கல்: எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-ஆவது நாளாக இன்றும்(மார்ச் 30) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் நாடு முழுவதும் 24,000 டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.ஒப்பந்தக் காலம் முடிவடையும் நிலையில், 2025 - 2030ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 17-ஆம் தேதி எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் பேச்சு நடத்தினர். அதன்பிறகும் புதிய கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் தளர்வு அளிக்கப்படவில்லை.

இதனால், எண்ணெய் நிறுவனங்களின் தென்மண்டலத்துக்கு உள்பட்ட சென்னை, கொச்சி, பாலக்காடு, விசாகப்பட்டினம், மங்களூரு, எடியூர், சரளப்பள்ளி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து எரிவாயுவை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் இயக்கப்படும் 4,000 டேங்கர் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி, வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ரு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்ரு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க

பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ... மேலும் பார்க்க