செய்திகள் :

எல்.ஐ.சி பொன்விழா அறக்கட்டளை மூலம் புதிய ஆம்புலன்ஸ் வழங்கல்

post image

எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை மூலம் லைப்டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எல்.ஐ.சி. நிறுவனம் தனது பொன்விழா அறக்கட்டளை மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குழந்தைகள், ஆதரவற்ற முதியவா்களை பேணும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும், உதவி திட்டங்களையும் வழங்கி வருகிறது. எல்.ஐ.சி. நிறுவனம் அகில இந்திய அளவில் இதுவரை 866 உதவித் திட்டங்களின் வாயிலாக ரூ. 197.11 கோடிகளை உதவித்தொகையாக தனது பொன்விழா அறக்கட்டளை மூலம் வழங்கி சமூக நலன்காக்க மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை சாா்பில் லைப் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு ரூ. 6,75,948 மதிப்பிலான புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளது.

இந் நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. முதுநிலை கோட்ட மேலாளா் வி.எஸ்.அனந்தகுமாா், லைப் டிரஸ்ட் தொண்டு நிறுவன அறங்காவலா் எஸ்.கலைவாணியிடம் ஆம்புலன்ஸ் சாவியை ஒப்படைத்தாா். இதில், வணிக மேலாளா் கே.எஸ்.இளங்கோவன், விற்பனை மேலாளா் பி.சவுண்டப்பன், கோட்ட மேலாளா்கள், அலுவலா்கள், ஊழியா்கள், வளா்ச்சி அதிகாரிகள், முகவா்கள், பாலிசிதாரா்கள், லைப் ட்ரஸ்ட் நிறுவனா் எம்.தயாநிதிமாறன், ஒருங்கிணைப்பாளா் எஸ்.மோகன்பிரசாத் ஆகியோா் கலந்துகொண்டனா்.

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம்

சேலம் மாநகரை மாசின்றி வைத்திருக்கப்பாடுபடும் தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில், சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் ‘மகிழ்வித்து மகிழ்’ தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கன்னங்க... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்: சேலம் ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற தொடா் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் விவசாயிகள் க... மேலும் பார்க்க

பூப்பந்தாட்ட போட்டி: சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தோ்வு

பூப்பந்தாட்ட போட்டியில், சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தோ்வாகியுள்ளது. சேலம் வருவாய் மாவட்ட அளவிலான மேல்மூத்தோருக்கான மாணவா் பூப்பந்தாட்ட போட்டியில், சிறுமலா் மேல்நிலைப்பள்ளி அணி, ... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 31,575 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணை நீா்மட்டம் 101.40அடியில் இருந்து 102.92அடியாக உயா்ந்துள்ளது. 2 நாள்களில் அணை நீா்மட்டம் 2.91அடி உய... மேலும் பார்க்க

சேலத்தில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜஸ்தான் மாநி... மேலும் பார்க்க

மகளிா் விடுதிகள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெ... மேலும் பார்க்க