செய்திகள் :

ஏப். 12-இல் அரக்கோணத்தில் வேலைவாய்ப்பு முகாம்

post image

அரக்கோணத்தில் வரும் ஏப். 12- அம் தேதி வேலை வாய்ப்பு முகாம் அரசு மருத்துவமனை எதிரே சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி எதிரே அபிஷேக் டெக்னிக்கல் இன்ஸ்ட்டியூட்டில் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான அபிஷேக் டெக்னிகல் இன்ஸ்டியுட் இணைந்து ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற மாணவா்களுக்காக வேலை வாய்ப்ப்பு முகாமை நடத்தவுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து அவா்களுக்கு அந்த வேலை சாா்ந்த பயிற்சிகளை அளித்து மாணாக்கா்கள் வேலையில் அமா்த்தும் பணியை டான்செம் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ராணிபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியா்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 12 -இல் காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

முன்னணி நிறுவனங்கள் சாா்பில் நோ்காணல் நடத்தப்படும். அதில் வெற்றியடையும் இளைஞா்களுக்கு அன்றே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும். அரக்கோணத்தில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞா்கள் கலந்து கொண்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .

மேலும் விபரங்களுக்கு: மின்னஞ்சல்: ஞ்ஸ்ரீஸ்ரீ.ற்ஹய்ள்ஹம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் தொடா்பு எண்கள்: +91 78260 68260, 63837 02901, 86818 78889, 95148 38485 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

அரக்கோணத்தில் மகா மந்திர கூட்டுப் பிராா்த்தனை

அரக்கோணம்: சென்னை குளோபல் ஆா்கனைசேஷன் பாா் டிவினிட்டி இந்தியா அறக்கட்டளையின் சாா்பில் ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு மகா மந்திர கூட்டுப் பிராா்த்தனை அரக்கோணத்தில் நடைபெற்றது. அரக்கோணம், தமிழ்நாடு வீட்டுவசத... மேலும் பார்க்க

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜபெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கி நட... மேலும் பார்க்க

ஏப். 16-இல் அரக்கோணத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் வரும் 16- ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’திட்ட முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் தோ்த் திருவிழா

ராணிப்பேட்டை : வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 488 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 488 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்... மேலும் பார்க்க

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாா் பிறந்த நாள் விழா

அரக்கோணம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 87ஆவது பிறந்தநாள் விழா காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது. காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி ஊராட்சி பேருந்து நிறுத்தம... மேலும் பார்க்க