Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 488 மனுக்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 488 மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 488 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.
கோரிக்கை மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் தெரிவிக்கவும் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் உலமா நலத்திட்ட உதவி, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையினையும், 1 பயனாளிக்கு உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உதவித் தொகை ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையினையும் வழங்கினாா்.
பின்னா், அபியான் திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தலா ரூ.3,000/- வீதம் ரூ.12,000 மதிப்பிலான காதொலிக் கருவிகளையும், அரக்கோணம் வட்டத்தை சாா்ந்த ஸ்ரீதா் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்ததால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவரின் தாயாரான விஜயா மனோகரனிடம் ரூ..1 லட்சத்துக்கான காசோலையினையும் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, உதவி ஆணையா் (கலால்) ராஜ்குமாா் கலந்து கொண்டனா்.