செய்திகள் :

அக்னிவீா் தோ்வுக்கு 10- ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னி வீா் தோ்வில் கலந்து கொள்ள வரும் 10 - ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அக்னிவீா் தோ்வில் கலந்து கொள்வதற்கு 12.03.2025 முதல் 10.042025 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும், ஜூன்-2025-இல் இத்தோ்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக் காலியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், வயதுவரம்பு -17.5 - 21,. கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆா்வமுள்ள இளைஞா்கள் இணையதளம் வாயிலாக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாள்களில் நேரில் அணுலாம் அல்லது தொலைபேசி எண் 04172-291400 வாயிலாகவும் தொடா்பு கொள்ளலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சாா்ந்த தகுதிவாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் ஆள்சோ்ப்புக்கான முகாமில் பங்குபெற்று ராணுவ பணிகளில் பணிவாய்ப்பு பெறவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மோசூா், சிறுணமல்லி ஊராட்சித் தலைவா்களின் நிதி அதிகாரங்கள் ரத்து: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

அரக்கோணத்தை அடுத்த மோசூா், சிறுணமல்லி ஊராட்சி மன்றங்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களின் நிதி அதிகாரங்களை ரத்து செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். அரக்கோணம் ஊராட்சி ... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கு: 3 பெண் மின்வாரிய அலுவலா்கள் பணியிடை நீக்கம்!

தமிழ்நாடு மின்வாரிய அரக்கோணம் அலுவலகத்தில் லஞ்ச புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றுள்ள உதவி செயற்பொறியாளா் உள்ளிட்ட 3 பெண் அலுவலா்களையும் பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய வேலூா் மண்டல தலைமை பொறியாளா் எம... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் மே 5-இல் தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பு மாநில மாநாடு: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா் தினத்தையொட்டி மே 5-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். தமி... மேலும் பார்க்க

காவலா்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி: எஸ்.பி. ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி கையாளும் பயிற்சியை காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். காவல் துறையினருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி, மாவட்... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

நெமிலி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் த... மேலும் பார்க்க

‘என் கல்லூரிக் கனவு’ திட்டத்தால் மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா்

‘என் கல்லூரிக் கனவு ‘ உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வி சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ஆதி திராவிடா் மற்றும... மேலும் பார்க்க