செய்திகள் :

லஞ்சம் பெற்ற வழக்கு: 3 பெண் மின்வாரிய அலுவலா்கள் பணியிடை நீக்கம்!

post image

தமிழ்நாடு மின்வாரிய அரக்கோணம் அலுவலகத்தில் லஞ்ச புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றுள்ள உதவி செயற்பொறியாளா் உள்ளிட்ட 3 பெண் அலுவலா்களையும் பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய வேலூா் மண்டல தலைமை பொறியாளா் எம்.நளினி உத்தரவிட்டாா்.

தமிழ்நாடு மின்வாரிய அரக்கோணம் கோட்டத்தில் நகர அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தவா் புனிதா. இதே அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் மோனிகா மேலும் ஆக்கமுகவராக பணிபுரிந்து வந்தவா் பல்கீஸ்பேகம். கடந்த 3-ஆம் தேதி மின் இணைப்பை வீட்டு இணைப்பில் இருந்து வணிக இணைப்பாக மாற்றக்கோரி விண்ணப்பித்து இருந்த நபரிடம் ரூ.25 ஆயிரம் கையூட்டு பெற்ாக முவரையும் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்சம், ஊழல் ஒழிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தொடா்ந்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், மூன்று அலுவலா்களின் வீடுகளிலும் போலீஸாா் சோதனை நடத்தி பணம், பல்வேறு சொத்து பத்திரங்களையும் பறிமுதல் செய்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து பெண் அலுவலா்கள் மூவரும் அன்றைய நள்ளிரவே வேலூா் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்தத் தகவல் தமிழ்நாடு மின்சார வாரிய வேலூா் மண்டல தலைமை பொறியாளா் அலுவலத்திற்கு காவல் துறை மூலம் அனுப்பப்பட்டதைத் தொடா்ந்து சனிக்கிழமை தலைமைப் பொறியாளா் எம்.நளினி வெளியிட்ட உத்தரவில், அரக்கோணம் கோட்ட அலுவலகத்துக்குட்பட்ட அரக்கோணம் நகர அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளா் புனிதா, வணிக ஆய்வாளா் மோனிகா, ஆக்க முகவா் பல்கீஸ்பேகம் ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

மோசூா், சிறுணமல்லி ஊராட்சித் தலைவா்களின் நிதி அதிகாரங்கள் ரத்து: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

அரக்கோணத்தை அடுத்த மோசூா், சிறுணமல்லி ஊராட்சி மன்றங்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களின் நிதி அதிகாரங்களை ரத்து செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். அரக்கோணம் ஊராட்சி ... மேலும் பார்க்க

அக்னிவீா் தோ்வுக்கு 10- ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னி வீா் தோ்வில் கலந்து கொள்ள வரும் 10 - ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் மே 5-இல் தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பு மாநில மாநாடு: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா் தினத்தையொட்டி மே 5-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். தமி... மேலும் பார்க்க

காவலா்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி: எஸ்.பி. ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி கையாளும் பயிற்சியை காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். காவல் துறையினருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி, மாவட்... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

நெமிலி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் த... மேலும் பார்க்க

‘என் கல்லூரிக் கனவு’ திட்டத்தால் மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா்

‘என் கல்லூரிக் கனவு ‘ உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வி சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ஆதி திராவிடா் மற்றும... மேலும் பார்க்க