செய்திகள் :

ஏப். 16-இல் அரக்கோணத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

post image

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் வரும் 16- ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’திட்ட முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரக்கோணம் வட்டத்தில் வரும் 16-ஆம் தேதி முகாம் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்சியா், மாவட்ட நிலையிலான அலுவலா்கள் கலந்து கொண்டு அரசு திட்டப் பணிகள், சேவைகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு விடுதிகள், நியாய விலைக் கடைகள், பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனா்.

மேலும் அரக்கோணம் வட்டத்துக்குட்பட்ட அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் பட்டா மாறுதல் தொடா்பான மனுக்கள் அளிக்கலாம்.

முகாமில் அரக்கோணம் வட்ட பொதுமக்கள் மட்டும் கோரிக்கை மனுக்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

அரக்கோணத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமுக்காக புதன்கிழமை அரக்கோணம் வந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அரக்கோணம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா். உங்களைத் தேடி உங்கள் ஊ... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலை வாலாஜா சுங்கச் சாவடியில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதித்து ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜி.மோகன் நடவடிக்கை மேற்கொண்டாா். வேலூா் சரக துணைப் போக்குவரத்து ஆணையா் கட்டுப்ப... மேலும் பார்க்க

ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆற்காடு நகரத் தலைவ... மேலும் பார்க்க

தமிழகத்திலேயே செயற்கை கை, கால்கள் அதிகளவில் விநியோகம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவீன செயற்கை கை, கால்கள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் அம்மன் கற்சிலை: வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பு

நெமிலி அருகே விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே உள்ள கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோதண்டன்(53). விவசாயி... மேலும் பார்க்க

பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு: ராணிப்பேட்டை ஆட்சியா்

பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு அமைக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க