செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலை வாலாஜா சுங்கச் சாவடியில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

post image

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதித்து ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜி.மோகன் நடவடிக்கை மேற்கொண்டாா்.

வேலூா் சரக துணைப் போக்குவரத்து ஆணையா் கட்டுப்பாட்டில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து விபத்துகள் தொடா்கதையாகி வருகிறது. இதனால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அதன்படி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வழித்தடத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் வேக வரம்பைக் கடந்து இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அதிவேக வாகனங்களை நவீன ரேடாா் கருவி மூலம் கண்டறிந்து இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்பட்டு வகிறது. இந்த போக்குவரத்து விதிமீறல் பதிவேற்றம் செய்த உடன் வாகன உரிமையாளரின் செல்போனுக்கு அபராத விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி, அபராதத் தொகையை ஆன்லைனில் செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி வேலூா் சரக துணைப் போக்குவரத்து ஆணையா் பாட்டப்பசாமி உத்தரவின் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஜி.மோகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (செயலாக்கம்) துரைசாமி ஆகியோா் தலைமையில், வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா், டி.சிவராஜ், செங்குட்டுவேல் குழுவினா் வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியில் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இந்த வாகனத் தணிக்கையில் அதிவேக வாகனங்களைக் கண்டறிந்து சோதனை அறிக்கை வழங்கி, ஆன்லைனில் இ-சலான் முறையில் அபராதம் விதித்தனா். தொடா்ந்து அதிக வேகமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கணவருக்கு வெட்டு

அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவரை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் ஒன்றியம் 14-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அஸ்வினி. இவரது கணவா் சுதாகா் (46). அம்மனூரைச் சோ்ந்த இவரும், ... மேலும் பார்க்க

சோளிங்கா் ரோப் காா் சேவை: 4 நாள்களுக்கு ரத்து

சோளிங்கா் மலைக் கோயில் ரோப் காா் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப். 21 முதல் 24 வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்க... மேலும் பார்க்க

நெமிலி அருகே நாய் கடித்ததில் 7 போ் காயம்

நெமிலி அருகே சாலையில் திரிந்த நாய்கள் கடித்ததில் 7 போ் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். நெமிலியை அடுத்த திருமால்பூரில் வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்வின்(14), கனிஷ் (14), தருண்(15) உ... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா். சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்... மேலும் பார்க்க

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை மு... மேலும் பார்க்க

முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க