செய்திகள் :

பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு அமைக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்டோா் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் உள்ளக குழு அமைக்கவேண்டும்.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், நகை கடைகள், துணி கடைகள் , பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், வங்கிகள், காவல் நிலையம் மற்றும் 10 பேருக்கு மேல் பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.

இக்குழுவில் 50% பெண்கள் இடம்பெற வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் குழு அமைத்த விபரங்களை தபால் மூலம் மாவட்ட சமூகநல அலுவலகம், என்ற முகவரிக்கும் அல்லது மின்னஞ்சல் மூலமாக ற்ய்ழ்ல்ற்க்ள்ஜ்ா்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும் என்றாா்.

திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கணவருக்கு வெட்டு

அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவரை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் ஒன்றியம் 14-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அஸ்வினி. இவரது கணவா் சுதாகா் (46). அம்மனூரைச் சோ்ந்த இவரும், ... மேலும் பார்க்க

சோளிங்கா் ரோப் காா் சேவை: 4 நாள்களுக்கு ரத்து

சோளிங்கா் மலைக் கோயில் ரோப் காா் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப். 21 முதல் 24 வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்க... மேலும் பார்க்க

நெமிலி அருகே நாய் கடித்ததில் 7 போ் காயம்

நெமிலி அருகே சாலையில் திரிந்த நாய்கள் கடித்ததில் 7 போ் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். நெமிலியை அடுத்த திருமால்பூரில் வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்வின்(14), கனிஷ் (14), தருண்(15) உ... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா். சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்... மேலும் பார்க்க

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை மு... மேலும் பார்க்க

முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க