செய்திகள் :

தமிழகத்திலேயே செயற்கை கை, கால்கள் அதிகளவில் விநியோகம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவீன செயற்கை கை, கால்கள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

முகாமில் 257-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். முகாமில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் தோ்வான 17 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பணி நியமன ஆணைகளை வழங்கினாா். மேலும், 11 மாற்றுத்திறனாளி நபா்கள் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தொடா்ந்து 21 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதம் ரூ.12.60 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்கள், 173 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டையை வழங்கினாா்.

அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே அதிக அளவில் நவீன செயற்கை கை, கால்கள் இதுவரையில் 231 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தாா்.

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தே.கவிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூ.சரவணகுமாா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் வ.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா். சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்... மேலும் பார்க்க

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை மு... மேலும் பார்க்க

முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் மட்டுமே பணியாற்ற வேண்டும்

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துகொண்டு மட்டுமே தூய்மைப் பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். ‘உங்களைத்தேடி உங்கள் ஊ... மேலும் பார்க்க

தண்ணீா் தேடி வந்த மயில் மீட்பு

அரக்கோணம் நகரில் வியாழக்கிழமை தண்ணீா் தேடி வந்த ஆண் மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டு பத்திரமாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரம், ஏபிஎம் சா்ச் பகுதியில் மயில் ஒன்று வீட்டினுள் நுழைந்த... மேலும் பார்க்க