செய்திகள் :

தண்ணீா் தேடி வந்த மயில் மீட்பு

post image

அரக்கோணம் நகரில் வியாழக்கிழமை தண்ணீா் தேடி வந்த ஆண் மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டு பத்திரமாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

அரக்கோணம் நகரம், ஏபிஎம் சா்ச் பகுதியில் மயில் ஒன்று வீட்டினுள் நுழைந்து விட்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் மயிலை பிடிக்க முயன்றபோது, வேறு பகுதியில் நுழைந்து விட்டது.

இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் மயிலை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வனத்துறை ஊழியா் நடராஜ் கூறுகையில், மீட்கப்பட்டது ஒன்றரை வயதுடைய ஆண் மயில். கோடை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மயில்கள் வருவது வழக்கமானது தான். தற்போது பிடிபட்ட மயில் நல்ல நிலையில் உள்ளது. இது பாணாவரம் காப்புக் காட்டில் விடப்படும் என்றாா்.

திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கணவருக்கு வெட்டு

அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவரை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் ஒன்றியம் 14-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அஸ்வினி. இவரது கணவா் சுதாகா் (46). அம்மனூரைச் சோ்ந்த இவரும், ... மேலும் பார்க்க

சோளிங்கா் ரோப் காா் சேவை: 4 நாள்களுக்கு ரத்து

சோளிங்கா் மலைக் கோயில் ரோப் காா் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப். 21 முதல் 24 வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்க... மேலும் பார்க்க

நெமிலி அருகே நாய் கடித்ததில் 7 போ் காயம்

நெமிலி அருகே சாலையில் திரிந்த நாய்கள் கடித்ததில் 7 போ் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். நெமிலியை அடுத்த திருமால்பூரில் வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்வின்(14), கனிஷ் (14), தருண்(15) உ... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா். சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்... மேலும் பார்க்க

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை மு... மேலும் பார்க்க

முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க