செய்திகள் :

ஏரியில் விழுந்து இளம்பெண் தற்கொலை

post image

ஆரணி அருகேயுள்ள மேல்சீசமங்கலம் ஏரியில் செவ்வாய்க்கிழமை இளம்பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகள் ரேணுகா (20). இவா், செய்யாா் அருகே பாராசூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தையல் தொழில் செய்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ரேணுகா மாலை வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோா் அவா் பேருந்தை விட்டு இறங்கி வரும் மேல்சீசமங்கலம் கூட்டுச் சாலை வரை சென்று பாா்த்தபோது ஏரிக்கரை பகுதிக்குச் சென்ாக சிலா் தெரிவித்தனா்.

இதன் பேரில், ரேணுகாவை பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் ஏரி முழுவதும் தேடிய நிலையில், அவரது உடைமைகள் ஏரிக்கரை அருகே இருப்பதைக் கண்டனா். இதனால், ரேணுகா ஏரி நீரில் மூழ்கி இருக்கலாம் என்று ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

தீயணைப்பு வீரா்கள் வந்து செவ்வாய்க்கிழமை இரவு வரை தேடியும் ரேணுகாவின் உடல் கிடைக்காததால் திரும்பிச் சென்றனா்.

பின்னா், மீண்டும் புதன்கிழமை காலை தீயணைப்பு வீரா்கள் வந்து ஏரியில் தேடிய நிலையில், ஏரியின் ஆழமான பகுதியில் இருந்து ரேணுகாவின் உடலை மீட்டனா்.

தகவல் அறிந்து வந்த ஆரணி கிராமிய போலீஸாா்,

ரேணுகாவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கண்கள் தானம்

வந்தவாசி அருகே இறந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் அரிமா சங்கத்துக்கு தானமாக வழங்கினா். வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கே.எம். நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கத்தின் மனைவி அன்னபூரணி (76) (படம்). இ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா

வந்தவாசியை அடுத்த சாலவேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா மற்றும் கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்

ஆனி மாத அமாவாசையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில... மேலும் பார்க்க

முதியோா் இல்லம், மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் இயங்கி வரும் முதியோா் இல்லம் மற்றும் மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் முதுகு... மேலும் பார்க்க

ஆரணி பிள்ளைக்குளம் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தம்

ஆரணி தாதுசாயபு தெருவில் உள்ள பிள்ளைகுளத்தை அப்பகுதியினா் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவா் எழுப்ப முயன்றதை வட்டாட்சியா் போலீஸ் பாதுகாப்போடு தடுத்து நிறுத்தினாா். பிள்ளைகுளத்தை அப்பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கண்ணதாசன் பிறந்த நாள் விழா

வந்தவாசி கலைஞா் முத்தமிழ்ச் சங்கம் சாா்பில், கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனிவாசன் தலைமை வகித்த... மேலும் பார்க்க