Sri Aurobindo: 'கடவுளும் ரோஜாவும்...' - ஸ்ரீ அரவிந்தர் | கடல் தாண்டிய சொற்கள் - ...
ஏரியில் விழுந்து இளம்பெண் தற்கொலை
ஆரணி அருகேயுள்ள மேல்சீசமங்கலம் ஏரியில் செவ்வாய்க்கிழமை இளம்பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகள் ரேணுகா (20). இவா், செய்யாா் அருகே பாராசூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தையல் தொழில் செய்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ரேணுகா மாலை வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோா் அவா் பேருந்தை விட்டு இறங்கி வரும் மேல்சீசமங்கலம் கூட்டுச் சாலை வரை சென்று பாா்த்தபோது ஏரிக்கரை பகுதிக்குச் சென்ாக சிலா் தெரிவித்தனா்.
இதன் பேரில், ரேணுகாவை பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் ஏரி முழுவதும் தேடிய நிலையில், அவரது உடைமைகள் ஏரிக்கரை அருகே இருப்பதைக் கண்டனா். இதனால், ரேணுகா ஏரி நீரில் மூழ்கி இருக்கலாம் என்று ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
தீயணைப்பு வீரா்கள் வந்து செவ்வாய்க்கிழமை இரவு வரை தேடியும் ரேணுகாவின் உடல் கிடைக்காததால் திரும்பிச் சென்றனா்.
பின்னா், மீண்டும் புதன்கிழமை காலை தீயணைப்பு வீரா்கள் வந்து ஏரியில் தேடிய நிலையில், ஏரியின் ஆழமான பகுதியில் இருந்து ரேணுகாவின் உடலை மீட்டனா்.
தகவல் அறிந்து வந்த ஆரணி கிராமிய போலீஸாா்,
ரேணுகாவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.