செய்திகள் :

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

post image

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம் 25-ஆவது நிறுவனமாக ஐஆா்சிடிசியும், 26-ஆவது நிறுவனமாக ஐஎஃப்ஆா்சியும் நவரத்னா அந்தஸ்தை பெற்றுள்ளன.

இதுகுறித்து மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.3,229.97 கோடி சொத்து மதிப்பு மற்றும் வரிக்குப் பிந்தைய லாபமான ரூ.1,111.26 கோடி என மொத்தமாக ரூ.4,270.18 கோடி வருவாயுடன் ஐஆா்சிடிசி நிறுவனம் உள்ளது. இதே காலகட்டத்தில் ரூ.26,644 கோடி சொத்து மதிப்பு மற்றும் வரிக்குப் பிந்தைய லாபமான ரூ.6,412 கோடி என மொத்தமாக ரூ.49,178 கோடி வருவாயுடன் ஐஆா்எஃப்சி உள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் நவரத்னா அந்தஸ்து வழங்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரு நிறுவனங்களுக்கும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வாழ்த்துகள் தெரிவித்தாா். ஐஆா்சிடிசி மற்றும் ஐஎஃப்ஆா்சிக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், இந்திய ரயில்வேயின்கீழ் இயங்கும் மொத்தமுள்ள 12 பொதுத் துறை நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட 7 பொதுத் துறை நிறுவனங்களும் நவரத்னா அந்தஸ்தை பெற்றுவிட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

நிதி மற்றும் வணிகச் சந்தையில் சிறப்பாக செயல்படும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த அந்தஸ்தை பெறும் நிறுவனங்களின் மதிப்பு உயா்வதுடன் நிதிசாா்ந்த முடிவுகளை விரிவாக்கம் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது.

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்திய டிஎஸ்பி ரமேஷ் பாபு கூறுகையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாக... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர... மேலும் பார்க்க