செய்திகள் :

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

post image

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய டிஎஸ்பி ரமேஷ் பாபு கூறுகையில்,

திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டு கோதாவரி ஆற்றின் நடுவில் உள்ள தீவான பிரிட்ஜ் லங்காவிலிருந்து 12 பேர் நாட்டுப்படகில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஹேவ்லாக் பாலத்தின் தூண் எண் எட்டிற்கு அருகே பலத்த காற்று காரணமாக படகு இழுத்துச் சென்றது. படகு கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

கோதாவரி நதியின் நடுவில் அமைந்துள்ளதால், காற்றை ரசிக்க பலர் தீவுக்கு வருகிறார்கள்.

நாட்டுப் படகுகள் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மீன்பிடிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் மக்கள் நாட்டுப்படகில் பயணிப்பதால் விபத்துக்கள் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உ.பி.: மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு!

உ.பி.யில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி நகரிலுள்ள பக்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் சிங். கடந்த சில ஆண்டுகளாக பஞ்... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞர்!

ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞரால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகத்சிங்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயபாடா சேத்தி சா... மேலும் பார்க்க

பூனையின் இறப்பால் துக்கம் தாளாமல் பெண் தற்கொலை: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தில் பூனையின் இறப்பால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா(32). இவர் கடந்த எட்டு ஆண்டுகள... மேலும் பார்க்க

மாதவி புச் மீதான நடவடிக்கைக்கு 4 வாரம் தடை: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதவி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நான்கு வாரங்களுக்கு நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

டிஜிட்டல் இந்தியாவில் கையால் 100 பக்க பட்ஜெட்டை எழுதிய நிதியமைச்சர்! யார் அவர்?

ராய்ப்பூர்: டிஜிட்டல் ஆதிக்க சகாப்தத்தில், 100 பக்க பட்ஜெட்டை கையால் எழுதி தாக்கல் செய்துள்ளார் சத்தீஸ்கர் நிதியமைச்சரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஓ.பி. செளத்ரி.முழு பட்ஜெட்டையும் தானே கையால் எழுதி... மேலும் பார்க்க

17 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த ஆண் நண்பர்!

மும்பையில் 17 வயது சிறுமி அவரது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியைச்... மேலும் பார்க்க