செய்திகள் :

ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் வருகை..!

post image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஹைதராபாத் வந்தடைந்தார். இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச்.22ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன.

வெளிநாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் அதன் அணிகளுக்கு சென்றுவருகின்றனர்.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அதன் அணியில் வந்தடைந்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இருக்கும் ஒரே வெளிநாட்டு கேப்டன் என்றால் அது பாட் கம்மின்ஸ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பார்டர் கவாஸ்கர் தொடரினை வென்ற பிறகு தனது மனைவி தாயாகப்போவதால் விடுப்பில் சென்றார்.

பின்னர், காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகினார். மூத்த வீரர்கள் இல்லாமல் ஆஸி. அணி அரையிறுதிவரை முன்னேறி இந்தியாவிடம் தோற்றது.

கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்தமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

கம்மின்ஸ் பேசியதாவது:

மீண்டும் அணியில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சீசன் முடிந்த ஓராண்டு ஆகவிருக்கிறது. அனைவரையும் பார்ப்பது ஆவலாக இருக்கிறது. ஆரஞ்சு ஆர்மி (ரசிகர்கள்) நம்பமுடியாத பயணம். கடந்தமுறை போலவே இந்தமுறையும் சிறப்பாக செயல்பட ஆவலாக இருக்கிறோம் என்றார்.

முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன்: ரிஷப் பந்த்

தலைமைப் பண்பு குறித்து லக்னௌ அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச்.22ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தில்ல... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: கேள்விக்குறியாக இருக்கும் ராஜஸ்தான் அணியின் சமநிலை!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ராஜஸ்தான் அணியின் சமநிலை குறித்து பேசியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருப்பவர்கள்: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், சந்த... மேலும் பார்க்க

காயம் குணமாகியது: சன்ரைசர்ஸ் அணியில் இணையும் நிதீஷ் ரெட்டி!

பிரபல ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி சன்ரைசர்ஸ் அணியில் இணைய தயாராக இருக்கிறார்.கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட்டிங், பந்துவீச்சு என அசத்தியவர் நிதீஷ் குமார் ரெட்டி. இவரது சிறப்பான செ... மேலும் பார்க்க